தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய திரையுலகமே வியக்கும் அளவுக்கு பல சாதனைகளை புரிந்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
இவர் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
இவரின் 50 வருட திரைப்பயணத்தில் 16 மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 6 முறை வென்றுள்ளார்
சாந்தி நிலையம் என்ற படத்தில் வரும்
இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் எஸ்பிபி.
ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய
ஆயிரம் நிலவே வா… பாடல் வெளிவந்தது.
அதிலிருந்து எஸ்பிபியின் திரைப்பயணம் படு வேகத்தில் ஆரம்பமானது.
எனவே அடிமைப் பெண் படமே அவரின் ஆரம்பமானது. தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் தனது கடைசி பாடலை பாடியுள்ளார்.
எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட எத்தனையோ ஹீரோக்களுக்கு எஸ்.பி.பி. பாடியிருந்தாலும், ரஜினிகாந்த் அறிமுக பாடல்கள் எஸ்பிபி.க்கு தனி சிறப்பு தான்.
இந்நிலையில், எஸ்.பி.பி. மறைவு குறித்து இரங்கல் தெரிவித்திருந்த இசைமைப்பாளர் டி.இமான், அவருடனான அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.
அதில், “எஸ்பிபி சாருடைய மறைவு எத்தனையோ இசை ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.
நம்முடைய எத்தனையோ இரவுகளுக்கு துணையாக இருந்திருக்கிறார்.
என்னுடைய இசைப் பயணத்தில் சின்னதிரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் சரி அவருடன் பணியாற்றியுள்ளேன்.
‘ஜில்லா’ படத்தில் ‘பாட்டு ஒண்ணு’ பாடலை எஸ்பிபி சாரும், ஷங்கர் மகாதேவன் சாரும் இணைந்து பாடியிருப்பார்கள்.
திரையில் விஜய் சாரும், மோகன்லால் சாரும் ஆடியிருப்பார்கள்.
அதன் பிறகு ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார்.
அவருடைய கடைசிப் பாடல் ரஜினி சாருக்காக அதுவும் என்னுடைய இசையில் நடந்திருப்பது என நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.
அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
எஸ்பிபி சார், பண்பானவர். அற்புதமான மனிதர். இனிமையானவர். அவருக்கு மாற்றே கிடையாது.
மிஸ் பண்ணுவேன் எஸ்பிபி சார். லவ் யூ” என தெரிவித்துள்ளார் இமான்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் அடுத்தாண்டு 2021 கோடை விடுமுறையில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.
SPB’s last song is for Rajini’s ‘Annaatthe’ in Imman’s music