தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’ .
இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
வெற்றி ஒளிப்பதிவு செய்ய இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் (தன் மறைவுக்கு முன்னர்) ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியிருக்கிறார்.
இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் 7 மாதங்களாக நிறுத்தப்பட்டது.
அடுத்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரஜினியின் இன்ட்ரோ சாங் குறித்து பிரபல இணையதளத்திற்கு விவேகா பேட்டியளித்துள்ளார்.
அதில்.. இவரின் பாடல் வரிகளை பார்த்த எஸ்பி் பாலசுப்ரமணியம் அவர்கள் “இந்த பாட்டு பெருசா பேசப்படும்” என்று பாராட்டி அந்த பாடலை பாடினாராம்.
பாவம்… அந்த பாடும் நிலா பாலுக்கு… அதுதான் அவரின் கடைசி பாடல் என தெரியாமல் போய்விட்டது.
Lyricist Viveka opens up on SPB’s last song in Annaatthe