தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடகர் நடிகர் எஸ்பிபி மரணம் தொடர்பாக MGM தனியார் மருத்துவமனை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினாரா? போன் பேசினாரா? என்ற கேள்விக்கு எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக பதிலளித்தார்.
‘அப்பா இறுதிச் சடங்கிற்கு அஜித் வந்தாலும் வராவிட்டாலும் அது விஷயம் இல்லை.
அவர், என் நண்பர். அவர், வந்தாரா? வரவில்லையா என்பதை என்பது பிரச்னை இல்லை.
அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என பேசினார்.
மேலும் சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு நன்றி.
அப்பா இறந்த துக்கத்தில் இருந்து எங்கள் குடும்பம் மீள்வதற்குள் நிறைய புரளிகள் வருவது வருத்தமாக உள்ளது.”
இவ்வாறு பேசினார் எஸ்பி.சரண்
SP Charan about Ajith not attending SPBs funeral