தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு எவரும் எதிர்பாராத தருணத்தில் விஜய் வந்திருந்தார்.
அவர் எஸ்பிபி மகன் சரணிடம் ஆறுதல் கூறி தனது இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொரானாவுக்கு பயந்து கொண்டு பல ஹீரோக்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இன்று காலை முதலே விஜய்யின் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியை நாமும் நம் தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் விஜய் வருகையை தெரிந்தவுடன் அவரை காண ரசிகர்கள் திரண்டனர்.
இதனால் அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்பட்டது.
உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!
விஜய்யின் ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளு நடைபெற்றது.
எனவே காவல் துறையினர் கூட்டத்தை விலக்கி விஜய்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
அந்த நெரிசலில் விஜய் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டுள்ளார்.
அதை தன் கையால் எடுத்துக் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.
அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Actor Vijay takes off the fan’s sandals from ground
"ரசிகனின் காலணிகளை எடுத்து கொடுத்த விஜய்" – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்#Vijay | #SPB pic.twitter.com/77A1RlPnKY
— Thanthi TV (@ThanthiTV) September 26, 2020
Courtesy : Thanthi TV