தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 1.04 மணியளவில் மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அவரின் ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று காணப்படுகிறார்கள்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடல் 12.30 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது மகன் சரண் இறுதி சடங்குகளை செய்தார்.
அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாடகர் மனோ, நடிகர் அர்ஜீன், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்பிபி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. (சற்று நேரத்தில்) இனி மண்ணில் அந்த எஸ்பிபி.யின் இனிய குரல் ஒலிக்காது.. ஆனால் விண்ணில் ஒலிக்கட்டும்.
Actor Vijay paid his last respect to late singer SPB