தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று நடைபெற்ற ரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன், அனிருத், கீர்த்தி சுரேஷ், பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, இறுதியாக எமோஷனல் ஆகிவிட்டு கண்ணீர் சிந்தினார்.
அவர் பேசும்போது…
பல தடைகள் வந்தாலும், ஒரு நல்ல சினிமாவை கொடுப்பதற்கு முயற்சித்து வருகிறோம்.
மக்கள் குறை சொன்னால் திருத்திக்கொள்கிறோம்.
நான் ஏறுகின்ற எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று பலர் நினைக்கலாம்.
தப்பான ஒரு விஷயம் செஞ்சிட்டு அழுதாதான் அது தப்பு.
நான் யாருக்கும் துரோகம் செய்யகூடாது என நினைக்கிறேன்.
நான் அழுததாதற்காக வருந்தவில்லை.
நான் ஹிட் கொடுப்பதால் பயம் வருகிறது. நான் யாருடைய ஹிட்டையும் திருடவில்லை.
நான் டயர்ட்டாக இருந்தாலும் சோகமாக இருந்ததில்லை.
மேலும் என் ரசிகர்களுக்காக நல்ல படங்களை கொடுப்பேன்.”
என்று சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசினார்.