தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைக்காலமாக அதிகளவில் நடக்கும் அராஜகம், ஊழல் மற்றும் அரசியல் நிகழ்வுகளை பார்த்தால் எந்தவொரு மனிதனும் நிச்சயம் கொதித்து எழுவான்.
இதுகுறித்து பிரபலங்களிடம் கேட்கும்போது அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன் ஹார்ட் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது அவரிடம் பெங்களுர் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளிக்கும்போது… அது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செய்தி. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கக்கூடாது.
இது என்னுடைய இந்தியா அல்ல. நான் பாசிட்டிவ்வான பொறுப்பான இந்தியாவை எதிர்பார்க்கிறேன் என ஆதங்கத்துடன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்” இந்த ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மான்.
I expect Positive and Responsible India says AR Rahman