தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’.
கடந்த வாரம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாகுபலி 2 படத்தின் விநியோகம் சம்மந்தமாக 18 கோடி ரூபாயை சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படம் வெளியாகவில்லை!
தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து ‘சிந்துபாத்’ படம் இன்று ஜீன் 27ஆம் தேதி வெளியாகிறது.
இத்துடன் நாளை ‘யோகி’ பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘நட்சத்திர ஜன்னலில்’, ‘ஜீவி’, ‘காதல் முன்னேற்ற கழகம்’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து விஜய் சேதுபதியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து டுவீட் போட்டார்.
”பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்” என்று பதிவிட்டார்.
ஆனால் அவற்றை எல்லாம் சிந்துபாத் கண்டுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.