தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சிந்துபாத் படம் அண்மையில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.
தற்போது மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி, சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம், விஜய் சந்தர் இயக்கும் சங்கத் தமிழன் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இவை அனைத்தும் இந்தாண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.
டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன் என்பதால் இப்படத்திற்கு 800 என பெயரிடப்பட உள்ளது.
எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்கும் இப்படத்தை உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
பிரபல நிறுவனமான தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரிக்கிறது.
இதன் சூட்டிங் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த வருடம் 2020-ம் ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட உள்ளனர்.