தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியை மூன்றாவது முறையாக இயக்குகிறார் அருண்குமார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி பக்கத்தில் உள்ள இலஞ்சியில் பூஜையுடன் துவங்கி நடைபெறுகிறது.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பதோடு, படத்தின் தயாரிப்பிலும் இணைந்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். வில்லனாக லிங்கா நடிக்கிறார்.
இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் இறைவி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியைத் தொடர்ந்து, மலேசியாவில் நடைபெறவுள்ளது.
‘பாகுபலி-2’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிட்ட ‘கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
Vijay Sethupathi and Anjali movie shooting started with Pooja