தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் தயாரித்து இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் லைக்கா சுபாஷ்கரன் இயக்குனர் மணிரத்னம் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி பங்கேற்றனர்.
ஆனால் நாயகி த்ரிஷா இந்த விழாவிற்கு வரவில்லை. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அண்மையில் வெளிநாட்டுக்கு திரிஷா சென்ற போது அங்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் தனது பயணத்தை செய்து விட்டு இந்தியா திரும்பி உள்ளார்.
ஆனாலும் டாக்டர்கள் அறிவுறுத்தல் படி அவர் சிறிது ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவரால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகை த்ரிஷா காலில் கட்டுடன்வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..
விபத்தை உறுதி செய்யும் வகையில், த்ரிஷாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Here is reason why Trisha not participated in PS1 Success meet