தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ரஞ்சித் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.
அதாவது மும்பையில் வாழ்ந்த பிரபல தமிழரான தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கைத்தான் இதன் கதைக்களமாக இருக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஹாஜி மஸ்தான் அவர்கள் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் என்பவர் ரஜினிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்…
என் தாத்தாவின் வாழ்க்கையை நீங்கள் படமாக எடுக்கவுள்ளதை பத்திரிக்கை மூலம் அறிந்தேன்.
அவர் ஒன்றும் தாதா அல்ல. மக்களுக்காக வாழ்ந்தவர்.
நீங்கள் படமாக எடுக்க விரும்பினால் என்னால் ஆன உதவிகளை செய்வேன். நானும் ஒரு தயாரிப்பாளர்தான்.
அவரது வாழ்க்கை வரலாறை நீங்கள் மாறாக சித்தரித்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கடிதம் அனுப்பியுள்ளார்.
Haji Masthan Foster Son send legal Notice to Rajinikanth for the Story issue of Thalaivar 161