கணேஷ் வெங்கட்ராமை கட்டித் தழுவி வரவேற்ற அஜித்

கணேஷ் வெங்கட்ராமை கட்டித் தழுவி வரவேற்ற அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ganesh venkatramஅபியும் நானும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.

அதனைத் தொடர்ந்து கமலுடன் உன்னை போல் ஒருவன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது 7 நாட்கள், இணையத்தளம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன் பட வெற்றி விழா பார்ட்டியின் போது அஜித்தை சந்தித்த அனுபவம் பற்றி தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுபோன்ற சக்ஸஸ் பார்ட்டி எனக்கு புதுசு. சிறிது தயக்கம் இருந்தது. எனவே நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது யாரோ என் பின்னால் தட்டுவதை உணர்ந்தேன். திரும்பினால் அஜித் சார்.

என் சூழ்நிலையை புரிந்துக் கொண்டு, என்னிடம் கை குலுக்கு ஆரத்தழுவி, வெல்கம் டூ தமிழ் சினிமா” என்றாராம் அஜித்.

இதனை இப்போதும் ஒரு மலரும் நினைவாக கூறிவருகிறார் இந்த இணையதள நாயகன்.

சூர்யா நடிக்க மறுத்த வேடத்தில் ஜெயம் ரவி

சூர்யா நடிக்க மறுத்த வேடத்தில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and jayam raviஇயக்குநர் விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதில் காட்டு வாசியான ஜெயம்ரவிக்கு வசனங்கள் கிடையாது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்டம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது முதலில் சூர்யா தான் இப்படத்தில் நடிக்கவிருந்தாராம்.

ஆனால் அப்போதுதான் 24 என்ற வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருந்தார்.

உடனே அதுபோன்ற கதைக்களம் வேண்டாம் என்பதால்தான் மறுத்துவிட்டாராம்.

ஆனால் தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்கள் சந்திப்பேன் என்று தெரிவித்தாராம் இந்த சிங்கம்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal and Karthiநாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் கொண்ட அணியினர் நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் அதிரடியான செயல்கள் செய்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ரஜினி, கமல் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து இந்த நடிகர் சங்க கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது 33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.

மேலும் நீதிபதிகள், ”நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும். நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் கே.இளங்கோவன் கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

வடசென்னை-யிலிருந்து விஜய்சேதுபதி-அமலாபால் விலகல் குறித்து தனுஷ்

வடசென்னை-யிலிருந்து விஜய்சேதுபதி-அமலாபால் விலகல் குறித்து தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay sethupathiபவர் பாண்டி படத்தை தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி மற்றும் அமலா பால் இருவரும் விலகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அமலாபால் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் விலகல் குறித்து தனுஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘விசாரணை’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதால், 3 மாதங்கள் வரை ‘வடசென்னை’ சூட்டிங்கை நிறுத்தினோம்.

இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டோம்.

ஒரு படம் தனக்கு என்ன தேவையோ அதை தேடிக்கொள்ளும். தானாகவே அமையும்.

யார் விலகினார்கள், யாரை இயக்குனர் வெற்றி மாறன் மாற்றினார் என்பதற்குள் போக வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

இப்போது படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush clarifies about Vijay Sethupathi and Amala Paul Call sheet issue in Vada Chennai movie

ஆனந்தி பட தலைப்பில் செருப்பை வைத்த விஜய் பட இயக்குனர்

ஆனந்தி பட தலைப்பில் செருப்பை வைத்த விஜய் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anandhi starring En Aaloda Seruppa Kaanom movie updatesவிஜய் நடித்த ‘புதிய கீதை’ மற்றும் சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேபி ஜெகன் என்ற ஜெகன்நாத்.

இவர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இயக்கிவரும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

இதில் ’பசங்க’ மற்றும் ‘கோலி சோடா’ ஆகிய படங்களில் நடித்த பாண்டி நாயகனாக நடிக்கிறார்.

ஆனால் தன் பெயரை மாற்றி தமிழ் என்ற பெயருடன் நாயகனாக அறிமுகமாகிறாராம்.

அது இருக்கட்டும். படத்தின் தலைப்பில் இருக்கும் அந்த செருப்பை தொலைத்த ஆள் யார் என்றுதானே கேட்கிறீர்கள்.

அவர்தான் கயல் ஆனந்தி.

ஆனந்தியின் செருப்பு காணாமல் போனதன் பின்னணியில் ஒரு வலுவான காரணத்தை வைத்திருக்கிறாராம் இயக்குனர்.

(என்னப்பா விகேசி செருப்பு விளம்பரத்துல வர போல இருக்கே…)

இவர்களுடன் யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, பாலசரவணன், கயல் தேவராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

en aaloda seruppa kaanom

பிரபாஸை மணக்க 6000 பெண்கள் போட்டி; ஆறாயிரத்தில் ஒருத்தி யார்?

பிரபாஸை மணக்க 6000 பெண்கள் போட்டி; ஆறாயிரத்தில் ஒருத்தி யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6000 girls were wish to marry Baahubali hero Prabhasநடிகரை மணக்க ரசிகைகள் போட்டி போடுவதும், நடிகையை மணக்க ரசிகர்கள் காத்து கிடப்பதும் காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

பெரும்பாலும் நடிகைகள் தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.

இப்போது நாம் சொல்லப்போவது பாகுபலி ஹீரோ பிரபாஸை பற்றித்தான்.

பாகுபலி படத்திற்காக 5 ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாத இவர், திருமணத்திற்கும் ஒத்துக் கொள்ளவில்லையாம்.

தற்போது பாகுபலி2 வெளியாகிவிட்டதாலும், இனி பாகுபலி பாகங்கள் தொடராது என ராஜமௌலியும் தெரிவித்து விட்டதால், பிரபாஸ் வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது.

இதனையறிந்த ரசிக பெண்மணிகள் அவரை மணக்க போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

திருமண தகவல் மையங்கள் கிட்டத்தட்ட 6000 பெண்கள் இவருக்காக பதிவு செய்திருக்கிறார்களாம்.

ஆராயிரத்தில் ஒருத்தியை பிரபாஸ் தேர்வு செய்வாரா? அல்லது வேறு பெண்ணை மணப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

6000 girls were wish to marry Baahubali hero Prabhas

More Articles
Follows