அக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

அக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal producer councilதமிழக படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதித்துள்ளது தமிழக அரசு.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி 28% வரி இதற்கு முன்பே அமலில் உள்ளது.

தற்போது உள்ளாட்சி அரசின் 10% வரிக்கும்  மத்திய அரசின் ஜிஎஸ்எஸ் வரி சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கேளிக்கை வரி தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே Piracy முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% ஜிஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம்.

இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக இன்று (அக்டோபர் 3) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From 6th Oct 2017 new tamil movies will not be released Producer Council announced

ரஜினி அரசியல் கட்சி குறித்து லதா ரஜினி பேட்டி

ரஜினி அரசியல் கட்சி குறித்து லதா ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajinikanth with super starஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பாக கேர் பாஃர் சில்ட்ரன்ஸ் நிகழ்ச்சி லதா ரஜினி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு, குழந்தை தற்கொலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு லதா ரஜினி கூறியதாவது…

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

மக்களுக்கான பல நல்ல திட்டங்களை வைத்துள்ளார்.

அவர் அரசியலுக்கு வருவதை அவரே அறிவிப்பார் என்றார் லதா ரஜினிகாந்த்.

அக்டோபர் 8-ல் நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம்

அக்டோபர் 8-ல் நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadigar sangamஅக்டோபர் 8-ம் தேதி 64-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் சங்க உறுப்பினர்களுகு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் சங்கம் சார்பாக 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக். 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும்.

இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார்.

துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார்.

பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த, பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார்.

அதனை தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ரசிகை ஜுலி

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் ரசிகை ஜுலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and julieதமிழக மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்டு புகழ் அடைந்தவர் ஜுலி.

அதன்பின் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

தற்போது 100 நாட்கள் முடிந்துவிட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் ஜுலி தன் சமீபத்திய பேட்டியில் ஒரு கேள்விக்கும் பதிலளிக்கும்போது தன் சினிமா ஆசையை தெரிவித்துள்ளார்.
‘நான் தளபதியின் தீவிர ரசிகை, ஆனால், தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.

ஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..? அட்லி விளக்கம்

ஹிட் படங்களை நான் காப்பியடிக்கிறேனா..? அட்லி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atleeஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி அவர்கள் ராஜா ராணி என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.

இப்படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்று சிலர் கூறினர்.

இதனையடுத்து விஜய் நடித்த தெறி படத்தை எடுத்தார். இப்படமும் சத்ரியன் படத்தின் காப்பி என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது.

தற்போது மெர்சல் படத்தை உருவாக்கியுள்ளார். இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன் கருத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் அட்லி.

அவர் கூறியதாவது… ‘இசையில் 7 ஸ்வரங்கள்தான் இருக்கிறது.

அதற்குள்தான் மெட்டமைக்க முடியும்.
பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் நிச்சயம் இருக்கும்.

காப்பி அடிக்கின்றேன் என்று ஈசியாக சொல்லிவிடுகிறார்கள்.

ஒரு படத்தை எடுக்கும் போது அதை இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். அதற்கான கஷ்டம் எனக்குதான் தெரியும்.
நானும் ஒரு உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறினார் அட்லி.

பீச்சாங்கை கார்த்திக் மற்றும் தெறி சாய் தீணா நடித்துள்ள லேகா

பீச்சாங்கை கார்த்திக் மற்றும் தெறி சாய் தீணா நடித்துள்ள லேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peechaankai fame RSKarthik act in LEGAA Pilot filmசினிமா என்கிற கனவுத் தொழிற்சாலை ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள தவறுவதில்லை.

ஓர் இயக்குனரின் எண்ணத்தில் உயிர் பெரும் ஒரு கதை, பின் திரைக்கதை வடிவம் பெற்று, ஒரு தயாரிப்பாளரின் அடைக்களம் பெற்று, நடிகர்களின் அசாத்திய நடிப்பினாலும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பினாலும் மெருகேற்றப்பட்டு ஒரு ரசிகனின் பார்வைக்கு விருந்தாகின்றது. காகிதத்தில் உறங்கி கிடைக்கும் ஒரு கதை, திரைவடிவம் பெறுவதே ஒரு இயக்குனரின் அடங்காத கனவாக இருக்கும்.

இதை சாத்தியமாக்க ஒரு இயக்குனருக்கும் அவரது குழுவிற்கும் பல வழிகள் உள்ளன.அப்படி ஒரு வழிதான் – காட்சிப்படம்.

காட்சிப்படம் என்றால் என்ன ? ஒரு முழு நீள திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியையோ அல்லது சில காட்சிகளையோ டிஜிட்டல் வடிவத்தில், சிறிய budgetல் எடுப்பதே காட்சிப்படம் ஆகும்.இப்படி எடுக்கப்படும் இந்த காட்சிப்படமானது கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரி காசு கொடுத்து படம் பார்க்கும் ஒரு ரசிகனுக்கும் சரி அந்த படத்தை பற்றிய ஒரு எண்ணத்தையும் உணர்வையும் தருகிறது.

அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சிப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஒரு தயாரிப்பாளர் தன் முடிவை எடுக்கலாம். காற்றில் முழம் போடாமல்.

கண்ணெதிரே எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதால் லாபத்துக்கான வாய்ப்புகள் என்றுமே சிறப்பாக இருக்கும்.

மேலும் ஒரு ரசிகனுக்கும் தான் பார்க்க போகிற படத்தின் மீதான எதிர்பார்ப்பு சிறப்பாகவும் சரியாகவும் இருக்கும்.

காட்சிப்படம் எடுத்தல் குறும்படம் எடுப்பதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? ஆம் இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு குறும்படம் என்பது அதை எடுத்தவர்களின், நடித்தவர்களின் திறமையை எடுத்துக்காட்டும். ஆனால் காட்சிப்படமானது ஒரு படி தாண்டி தான் எடுக்கப் போகும் கதையின் பலத்தை ஒரு தயாரிப்பாளருக்கு எடுத்துக்காட்டும்.

எனவெ…. இவை அனைத்தையும் மனதில் வைத்து இளைஞர் குழு ஒன்று ஒரு 25 நிமிட காட்சிப்படத்தை எடுத்துள்ளது.. அந்த காட்சிப்படத்தின் பெயர் “லேகா”.

“பீச்சாங்கை” புகழ் கார்த்திக் மற்றும் “தெறி” புகழ் சாய் தீணாவும் தங்கள் ஒத்துழைப்பை கொடுத்து இந்த படத்தில் நடித்துக் கொடுத்துள்ளனர்.

முக்கியமாக இந்த திரைப்படத்திற்கான கதை ஒற்றை பாணியில் இல்லாமல் பல பாணிகளின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. மர்மம், திகில்,கற்பனை, காதல், சிரிப்பு, சண்டை என்ற பல பாணிகளின் சரியான கலவையாக படத்தின் கதை பயணிக்கும்.

இப்படிப்பட்ட கதையின் ஒரு சில காட்சிகள் மட்டும் இந்த காட்சிப்படத்தில் இடம்பெறும். எனவே ரசிகர்களின் ஏகோபித்த ரசனையை வெல்லும் படமாக இந்த காட்சிப்படம் அமைய வாய்ப்புள்ளது.

மேலும் இனிமையான செய்தி என்னவென்றால் இந்த காட்சிப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது.

Behindwoods இந்த குழுவுடன் இணைந்து OCT 5th 5 மணிக்கு இந்த காட்சிப்படத்தை வெளியிடுகிறது .இதை கீழே கொடுக்க பட்டுள்ள linkல் கண்டு களிக்கலாம்.

Peechaankai fame RSKarthik act in LEGAA Pilot film

www.youtube.com/user/behindwoodstv

More Articles
Follows