தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டான்’.
லைகா புரொடக்ஷன் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ஊர் மக்கள் நூற்றுக்கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டனர்.
அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனவும் நிறைய பேர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும் சொல்லப்படுகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் பின்னர் காவலர்கள் உதவியுடன் மக்களை கலைந்து போகச் செய்தனர்.
தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இத்துடன் ‘டான்’ படக்குழுவினருக்கு ரூ 10,000/- அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Fine for Sivakarthikeyan’s new film Don