தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பார்த்திபன் பேசியதாவது…
”பொடி மாஸ் பண்ண முட்டை வேனும். அதுபோல் மாஸ் படம் பண்ண விஜய் வேனும்.
பன்ச டயலாக் எல்லாருக்கும் எழுதாலாம். விஜய்க்கு பொருத்தமாக இருக்கும்.
விஜய் எந்த மொழி படத்தில் நடித்தாலும் அவரின் பிரம்மாண்டம் ரசிகர்கள்தான்.
விஜய் மற்றும் ரசிகர்கள்தான் இணைந்தால் அது 100 கோடி வசூலிக்கும். விஜய் ஏஆர். ரஹ்மான் இணைந்தால் 200 கோடியும், அத்துடன் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இணைந்தால் 300 கோடியும் வசூலிக்கும்.
ராமநாராயணன் சின்ன பட்ஜெட் படங்களை எடுப்பவர். ஆனால் அவரது மகன் முரளி மிகப்பிரம்மாண்டமாக மெர்சல் படத்தை எடுத்துள்ளார்.
பொதுவாக 25 + 25 சேர்ந்தால் 50தான் வரும். ஆனால் விஜய் 25 + ஏஆர்.ரஹ்மான் 25 சேர்ந்துவிட்டதால் இது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆகிவிட்டது.
ட்விட்டரில் எந்த தமிழ் படத்திற்கும் எமோஜி உருவாக்கப்படவில்லை. அது மெர்சலுக்கு கிடைத்துள்ளது.
விஜய்யின் அடுத்த படத்திற்கு அமெரிக்க அதிபர் வாழ்த்துவார். அவர் உலகின் மிகச்சிறந்த CM விஜய்தான் சொல்லுவார்.
CM என்றால் Collection Mannan என்று பொருள்.
தமிழ்நாட்டை நல்லவர்கள் ஆளட்டும். விவசாயிகளை வாழ வைக்கட்டும் என்று பேசினார் பார்த்திபன்.
Even America President will day Vijay is Best CM says Parthiban