தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 16ஆம் தேதிக்கு பின்னர் தமிழ் படத்தின் சூட்டிங்கை உள்நாட்டிலும், மார்ச் 23ஆம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டிலும் நடத்த கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் சென்னை தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மார்ச் 20ஆம் தேதி ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பட சூட்டிங் சென்னை, விக்டோரியா மஹாலில் நடைபெற்று வருகிறது. (சென்னை அரசு மருத்துவமனை எதிரில்)
இதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் பங்கு கொள்ளும் தொழிலாளர்கள் பலர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்று நாடோடிகள் 2 மற்றும் இதர 2 படங்கள் 2 நாட்களுக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
சினிமா துறைச் சார்ந்த பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வரும் இந்த வேளையில் முன்னணி நடிகரான விஜய் திரையுலக ஒற்றுமையை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளலாமா? என தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் மற்றும் டைரக்டர் வெங்கடேஷ் ஆகியோர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் 62 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
J Satish KumarVerified account @JSKfilmcorp 6m 6 minutes ago
Actor #Vijay ‘s shooting is happening now at Victoria Hall. Where is our unity? How can our council give spl permission? I strongly oppose this decision. Don’t split up.
During Cinema Strike Vijay 62 shooting happening in Chennai