எம்ஜிஆர்..? ரஜினி..? விஜய் 62 படத்திற்கு யார் படத்தலைப்பு..?

எம்ஜிஆர்..? ரஜினி..? விஜய் 62 படத்திற்கு யார் படத்தலைப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 62சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, விஜய் நாயகனாக நடித்து வருகிறார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

2018 தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தின் கதைப்படி தமிழக விவசாயிகளுக்கும் தமிழக மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரர் ஆக வருகிறாராம் விஜய்.

இதனால் அவருக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வருகிறதாம்.

இதனால் மீனவ நண்பன் (எம்ஜிஆர் படத்தலைப்பு) அல்லது பணக்காரன் (ரஜினி படத்லைப்பு) என்ற தலைப்பை வைக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி தான் படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING: காவிரி வரும் வரை காலா இசை வெளியீட்டை நடத்தக்கூடாது!

BREAKING: காவிரி வரும் வரை காலா இசை வெளியீட்டை நடத்தக்கூடாது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala audioரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சில மணி நேரங்களில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதனால் சென்னையை நோக்கி மற்ற மாவட்டங்களில் இருந்து ரஜினி ரசிகர்கள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சில அமைப்புகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காலா இசை வெளியீட்டை நடத்தக் கூடாது.

ஐபிஎல் போட்டியால் காவிரி போராட்டம் தடை பட்டது, அதுபோல் மோடிக்கு நெருக்கமான ரஜினி தன் இசை வெளியீட்டை நடத்த கூடாது-

காவிரி நீர் வரும் வரை ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படத்தை வெளிய்யிட கூடாது எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஒய்எம்சிஏ மைதானம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

முரட்டு குத்து ஓடினால் சினிமாவுக்கு நல்லதுல்ல; விளாசும் விஜய்மில்டன்

முரட்டு குத்து ஓடினால் சினிமாவுக்கு நல்லதுல்ல; விளாசும் விஜய்மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vijay milton‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படம் வெளியாகி தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் ஆகியோர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் அந்தப் படம் ஓடக்கூடாது என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் இருந்துக் கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது.

ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது.

மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள்.

இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது.

ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்’ என்று ஓபனாக பேசியுள்ளார்.

காலையில் இசை; மாலையில் விழா… கலக்கும் காலா சேட்டு

காலையில் இசை; மாலையில் விழா… கலக்கும் காலா சேட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths Kaala audio launch updatesரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் ‘காலா’. இதில் காலா சேட்டு என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார்.

இவருடன் ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார்.

படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.

இதன் இசை வெளியீட்டு விழா இன்று மே 9ஆம் தேதி மாலை நடைபெறவுள்ள நிலையில், பாடல்களை மட்டும் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியிடவுள்ளனர்.

இதனை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் சுபாஷ் சந்திர போஸ்-பிரபாகரன் நடிக்கும் 18.05.2009

இளையராஜா இசையில் சுபாஷ் சந்திர போஸ்-பிரபாகரன் நடிக்கும் 18.05.2009

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja composed music for True Incident movie 18-05-2009குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “

சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.
எழுத்து – இயக்கம்: கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் )

கதை…

தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்

2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்தது.
சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.

.தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறிபிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்றுவெளிகளில் கரைந்து விட்டது……!

தமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்துவிடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது 18.05.2009.

அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர்….. தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்……

மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை….. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 18.05.2009.

18.05.2009 தமிழரின் குருதியால் எழுதப்பட்டிருக்கும் துயர வரலாறு…….

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்துகிற வரலாறு….

இதுவரை தமிழ்த் திரை மொழியில் எழுதப்படாத வரலாறு…..

படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது. வரலாற்றுக்குத் திரைவடிவம் தருவதில் பங்கேற்றோர்.

இயக்குநர் கு.கணேசன்….. சில குறிப்புகள்

கர்நாடகத் தமிழர்.

முதல் திரைப்படமான ‘ஆஷா ஜோதி’ (கன்னடம்) மூலம் கன்னடத் திரையுலகின் கவனம் கவர்ந்தவர்.

‘சவி நிலையா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை உளவியலைப் படம்பிடித்தவர்.

நானே சத்யா, மானவியத்தே, நவபாரதி, மன்னின மக்களு, யாரே நீ மோகினி, நம்ம மகு, அம்மடு (தெலுங்கு), மனிதம் (தமிழ்), தடைசெய்யப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ ஆகிய படைப்புகளின் மூலம் தென்னிந்திய மொழிகளில் தடம்பதித்தவர்.

2009ல், ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதில் பின்னணியாய் இருந்தவர்…

இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் ‘பொங்குதமிழ்’ மாநாட்டை பெங்களூரில் பிரமாண்டமாக நடத்தி, எடியூரப்பா போன்ற கன்னடத் தலைவர்களைக் கூட தமிழர்களுக்காகக் குரலெழுப்ப வைத்தவர்.

தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு கர்நாடகத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின்போது வாங்கிய பல்லாயிரம் கையெழுத்துப் படிவங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (ஜெனிவா) நேரடியாக ஒப்படைத்தவர்… ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்.

இசை: இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு: பார்த்திபன், சுப்பிரமணியன்
கலை இயக்கம்: பிரவீண்
பாடல்கள்: மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்
ஒலிக்கலவை: யுவராஜ்
மக்கள் தொடர்பு: மௌனம் ரவி
தயாரிப்பு: குருநாத் சலசானி

Ilayaraja composed music for True Incident movie 18-05-2009

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா டூயட்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா டூயட்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara romance with Sivakarthikeyan in Rajesh directionபொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை அடுத்து எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பே நாம் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 வருடம் வெளியான வேலைக்காரன் படத்திலும் இந்த ஜோடி டூயட் பாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara romance with Sivakarthikeyan in Rajesh direction

More Articles
Follows