சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட உரிமையை வாங்கிய உதயநிதி

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட உரிமையை வாங்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்”

இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது.

தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா.; தயாரிப்பாளர் & இயக்குனர் இவர்களா.?

இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.C ஆகியோர் இருந்தனர்.

பாடல்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு – நாகூரான்
கலை – உதயா UA
சண்டைப் பயிற்சி – விக்கி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, சதீஷ் (AIM)

Don theatrical rights bagged by Red Giant Movies

என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘

என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது .உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது.ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.

ஆனால் ‘ரீ ‘ படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல.அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.

என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?என்று அறிய முற்படுகிறாள்.ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் ” ரீ’.

இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார் .அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ்
சார்பில் தயாரித்துள்ளார்.

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இயக்குநர் சுந்தரவடிவேல் மதுரையைச் சேர்ந்தவர். தனியார் திரைப்படக் கல்லூரிகளில் திரைப்படக்கலைப் படிப்பினை முடித்தவர், குடும்ப நிர்ப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சில காலம் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் தன் கனவை நிறைவேற்ற, களத்தில் குதித்திருக்கிறார் .

திரையுலகின் கள அனுபவம் வேண்டி ‘சண்டி முனி’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். ‘வலியோர் சிலர்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பரவலாகத் திரையுலக அனுபவம் பெற்றிருக்கிறார்.

அப்படிப்பட்ட அவர் உருவாக்கியிருக்கும் படம் தான் ரீ.

இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம்.
இப்படத்தில் ‘ ஹர மகாதேவி ‘ படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார்.பாலச்சந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் பிரசாத் , சங்கீதா பால், மணி சங்கர் ,சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு ஒளிப்பதிவு தினேஷ்ஸ்ரீநிவாஸ், பின்னணி இசை ஸ்பர்ஜன் பால் , பாடல் இசை ஹரிஜி, எடிட்டிங் கே.ஸ்ரீனிவாஸ்.

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

மதுரையும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின பெரும்பகுதி இரண்டு வீட்டில் நடக்கும் படி உருவாகியுள்ளது.

”சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த இந்தப் படம், கணிசமான நடுத்தர பட்ஜெட் நிலைக்குக் கொண்டு சென்று ஒரு முழுமையான தரமான படமாகவும் விறுவிறுப்பான படமாகவும் உருவாகியிருக்கிறது,” என்கிறார் இயக்குநர் சுந்தரவடிவேல்.

த்ரில்லர் பட ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரம் செய்யும் வகையில் விரைவில்’ ரீ’ வெளிவர இருக்கிறது.

REE – A MYSTERIOUS THRILLER WITH THE RESONANCE OF A WEIRD AND SPOOKY SOUND

‘மாநாடு’ பட டயலாக் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ டைட்டில் ஆச்சு

‘மாநாடு’ பட டயலாக் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ டைட்டில் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார்.

மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்

செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் K.C.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

கலை – கிருஷ்ணா
படத்தொகுப்பு – K.J.வெங்கட்ரமணன்
காஸ்ட்யூம் டிசைனர் – சோபியா ஜெனிபர்
மேக்கப் – ராஜா
சண்டைப்பயிற்சி – விக்கி
புரொடக்‌ஷன் எக்ஸிகியுடிவ் – சேகர்
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – G.பிரதீப் குமார், சன் செந்தில்
ஸ்டில்ஸ் – சக்தி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

Maanaadu movie dialogue becomes Kayal Chandran’s film title

ஹாலிவுட்டில் நுழையும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

ஹாலிவுட்டில் நுழையும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி & பாகுபலி 2 படங்களுக்கும் அதன் பிறகும் உருவான பிரபாஸின் படங்களுக்கும் பான் இந்தியா படம் என அந்தஸ்து கிடைத்துள்ளது.

சாஹோ & ராதே ஷ்யாம் ஆகியவை 5 மொழிகளில் உருவாகி இந்தியளவில் ரிலீசானது. ஆனால் இவை இரண்டும் பிரபாசிக்கு தோல்வி படங்களாக அமைந்தன.

தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார், ஆதிபுரூஷ் படங்கள் உருவாகி வருகின்றன.

ராதே ஷ்யாம் படு தோல்வி.. பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா பிரபாஸ்.?

மேலும் அஸ்வின் நாக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறாதாம்.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Prabhas all set to make hollywood debut

இளையராஜாவின் ‘உலகம்மை’ இசை விழாவில் பங்கேற்று வாழ்த்திய பாரதிராஜா

இளையராஜாவின் ‘உலகம்மை’ இசை விழாவில் பங்கேற்று வாழ்த்திய பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் பிரகாஷ்.

இவர் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இருப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை தான் இந்த ‘உலகம்மை’.

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

“உலகம்மை” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படங்களில் நடித்த கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கின்றார்.

வெற்றி மித்ரன் நாயகனாக நடிக்கிறார்.

இவர்களுடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இன்று சென்னையில் இளையராஜா ஸ்டூடியோவில் இளையராஜா முன்னிலையில் இப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார் இயக்குனர் பாரதிராஜா.

ஆத்தா-வை கைவிட்ட பாரதிராஜா..; இளையராஜா கூட்டணி முறிவு..

இயக்கம் – விஜய் பிரகாஷ், தயாரிப்பு – V.மகேஷ்வரன் (SVM புரொடக்‌ஷ்ன்ஸ்), இசை – இசைஞானி இளையராஜா,
கதை (நாவல்) – சு.சமுத்திரம்,
ஒளிப்பதிவு – K.V.மணி, வசனம் – குபேந்திரன்

திரைக்கதை – சரவணன், கலை – வீரசிங்கம், படத்தொகுப்பு – ஜான் அப்ரஹம், உடைகள் – ஜெயபாலன்
ஒப்பனை – பாரதி

Bharathi Raja praises Ilaiyaraja at Ulagammai audio release

‘டெடி’ டைரக்டருடன் இணைந்த ஆர்யா சிம்ரன் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி்

‘டெடி’ டைரக்டருடன் இணைந்த ஆர்யா சிம்ரன் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் உற்சாகத்தில் இருந்தார் ஆர்யா.

ஆனால் அரண்மனை 3 அட்டர் ப்ளாப் ஆனதால் அப்செட்டில் இருந்தார். எனவே அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறார்.

ஆர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் ‘கேப்டன்’ படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

“டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.

ஆர்யா நல்லா நடிக்கிறான்.. ரொம்ப அடிக்கிறான்.. வலி தாங்கல – விஷால்

நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த ஃபர்ஸ்ட்லுக் உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரவேண்டும் என்பதே ஆகும்.

இதுதவிர, இந்த சிங்கிள் ஃப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது, ரத்தம் சூடுபிடிக்கும் பரபர திரில் சவாரியாக இப்படம் இருக்கும்.

இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு, தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்யா எனும் அற்புதமான நடிகர் ‘கேப்டன்’ படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக்குழுவும் சாட்சியமளிக்கிறது,.

மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட படக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“கேப்டன்” திரைப்படத்தை Think Studios நிறுவனம், நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் இணைந்த ‘மலையாளி’ குஞ்சாக்கோ போபன்

படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

“கேப்டன்” படத்திற்கு, D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார்.

யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

Arya joins Teddy director again

More Articles
Follows