‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்

‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘மாநாடு’.

இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியால் தற்போது தெலுங்கு & ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்த நிலையில் நேற்றுடன் இந்த படம் நூறாவது நாள் என்ற சாதனையை எட்டியுள்ளது.

இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிகரமாக 2வது நாள்… வெற்றிகரமாக 3வது நாள்… என போஸ்டர்கள் – பேப்பர் விளம்பரங்கள் வருகின்றன.

அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் இந்த போஸ்டர்கள் டிசைன் சமீபத்தில் வந்தன.

எனவே 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தின் 100-வது நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

அப்போது அவர் ரசிகர்களுடன் செஃல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த வெற்றி சினிமாவிற்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் நானில்லை.

ரசிகர்களை சந்திப்பதாக இருந்த கூட்டம் தள்ளிப் போனது. எனவே தான் இப்போது ரசிகர்களை சந்திக்க வந்தேன்” என்றார் சிம்பு.

‘மாநாடு’ 100வது நாளையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில்…:

“எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் துணிந்து இறங்கு எனத் தட்டிக் கொடுப்பவர்.

துணிந்து இறங்கி செய்த படம் மாநாடு. தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் ஒத்துழைப்பால் மாநாடு நூறு நாட்களைத் தொட்டுள்ளது. இதயம் முழுக்க மகிழ்வுடன் இவ்வெற்றியை என் தாய் தந்தையருக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

STR celebrates 100 days of Maanaadu with his fans

இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யப் போகும் பெண் இவரா.?

இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யப் போகும் பெண் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான்.

100 படங்களுக்கு மேல் இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துக்கும் இசையமைத்து இருந்தார்.

2021ல் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்காக தேசிய விருதும் வென்றார் இமான்.

இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் 2021ல் டிசம்பர் 29ல் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் இமான்.

தற்போது பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார் இமான்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை இமான் மறுதமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன

இதுபற்றி இமான் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‛‛இமான் மறுமணம் குறித்து வந்த செய்தி உண்மையில்லை. விவாகரத்து நடந்தது பற்றி சொன்னார்.

திருமணம் நடப்பதாக இருந்தால் நிச்சயம் சொல்வார். இமான் வெளிப்படையாக சொல்பவர். கடவுள் இருக்கார். நல்லது நடக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Music director Imman denies rumours on second marriage

டாப் ஹீரோஸே இன்னும் ரெடியாகல.; ‘ஹரா’-க்கு தீபாவளி சீட் போட்ட விஜய்ஸ்ரீ

டாப் ஹீரோஸே இன்னும் ரெடியாகல.; ‘ஹரா’-க்கு தீபாவளி சீட் போட்ட விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இளையராஜா இசையில் உருவான இவரது பட பாடல்களும் பிரபலம். எனவே மைக் மோகன் என அழைத்தவர்களும் உண்டு்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனை நாயகனாக்குகிறார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் 2022 புத்தாண்டில் வெளியிட்டனர்.

இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ இணைந்திருக்கிறார்.

1980-90களில் மோகன் மற்றும் குஷ்பூ முன்னணி நட்சத்திரங்களாக இருந்த போதும் இவர்கள் இணைந்து தமிழில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில் ‘ஆத்ம கதா’ என்ற படமொன்றில் ஜோடியாக இணைந்துள்ளனர்.

‘ஹரா’ படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஏப்ரல் மாதம் ‘ஹரா’ மோசன் போஸ்டர் ரிலீஸ் எனவும் 2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் பட தயாரிப்பு நிறுவனங்களே தீபாவளியை குறி வைத்து தங்கள் பட ரிலீசை அறிவிக்காத போது விஜய்ஸ்ரீ இப்போதே தைரியமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan film Haraa is announced for Diwali release

நல்ல கதைக்கு ரூ 50 லட்சம் சன்மானம்.. கோலிவுட் டாப் ஸ்டார்ஸ் நடிக்க ரூ 100 கோடியில் படம்.; இயக்குனர்கள் சங்கம் முடிவு

நல்ல கதைக்கு ரூ 50 லட்சம் சன்மானம்.. கோலிவுட் டாப் ஸ்டார்ஸ் நடிக்க ரூ 100 கோடியில் படம்.; இயக்குனர்கள் சங்கம் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்று தலைவரானார். பாக்யராஜ் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.

இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலைப்புலி தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசியதாவது…

இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்காக இயக்குனர் சங்கத்துடன் இணைந்து ரூ 100 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க தயாராக இருக்கிறேன்.

இயக்குனர் யார்? கதை என்ன? யார் யார் நடிக்கிறார்கள் என்பதை இயக்குனர் சங்கமே முடிவு செய்ய வேண்டும்.

அந்த படத்தில் எல்லா நடிகர், நடிகைகளும் நடிக்க வேண்டும். அப்படி நடித்தால் அதில் கிடைக்கும் லாபத்தை இயக்குனர்கள் சங்கம், FEFSI பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.” என பேசினார் தாணு.

இதற்கு பதில் அளித்து இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசினார். அவர் பேசியதாவது…

“தாணுவின் நல்ல திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்.

நல்ல கதையுடன் வரும் இயக்குனர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

இந்த படத்தில் வரும் லாபம் திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.

முதல் கட்டமாக பத்து படங்களை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு இனி துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்களுக்கு சங்கம் வழியாக சம்பளம் பெற்றுத் தரப்படும்.

இது தவிர ஆண்டுக்கு 70 துணை இயக்குனர்கள் குறும்படம் எடுக்க வசதி செய்து தரப்படும். திறமையான இயக்குனர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் படம் இயக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

இதற்காக இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு கதைகளை தேர்வு செய்து வருகிறது.” என பேசினார் ஆர்கே செல்வமணி.

Director association new desicion on fefsi employees

சூப்பர் ஸ்டோரி இருக்கா.? சான்ஸ் ரெடி.; வாய்ப்பளிக்க காத்திருக்கிறார் தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்

சூப்பர் ஸ்டோரி இருக்கா.? சான்ஸ் ரெடி.; வாய்ப்பளிக்க காத்திருக்கிறார் தயாரிப்பாளர் சக்தி தேவராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கால் பதிக்கிறார் பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இசைப்புயல் ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆரட்டு’ உட்பட பல படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தமிழில் களமிறங்குகிறார்.

சென்னை சாலிகிராமத்தில், தனது ‘ஹிப்போ ப்ரைம் ‘ நிறுவனத்தின் கிளையை துவக்கி வைத்த தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தனது நிறுவனம் தமிழில் டிஜிட்டல் மீடியா துறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

”ஹிப்போ ப்ரைம் மீடியா’ என்ற பெயரில் தொடங்கி இருக்கும் இந்த நிறுவனத்தின் மூலமாக தரமான மற்றும் சுவாரஸ்யமான சினிமா நிகழ்ச்சிகளை மக்களிடையே கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

மலையாள தயாரிப்பாளரான சக்தி தேவராஜ், தமிழில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, தனது ஆரட்டு படம் மக்களிடையேயே பெருமளவு வரவேற்பு பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களும் படத்தை ரசித்தனர்.

சினிமா என்பது ஒரே மொழி தான். தமிழிலும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளேன். புதியவர்களாக இருந்தாலும், திறமையானவர்கள் நல்ல கதைகளுடன் அணுகினால், தயாரிப்பதற்கு நான் தயார் என்கிறார்.

எங்களது கதை இலாகா குழு தேர்வு செய்கிற கதைகளைத் தமிழில் தயாரிப்பேன். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றில்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு தர நினைத்திருக்கிறேன்” என்றார்.

தற்போது தமிழ் சினிமா துறை சிறப்பாக இயக்கி வருகிறது. திறமையானவர்கள் வெளியே அறியப்பட்டு வருகிறார்கள்.

நாங்கள் தயாரிக்கும் படங்களிலும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தமிழ் திரையுலகில் நல்ல நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறார்.

Producer Sakthi Devaraj launches hippo prime video in chennai

கலையுலக வாரிசு ஆதேஷ் பாலா கதையின் நாயகன் ஆனார்

கலையுலக வாரிசு ஆதேஷ் பாலா கதையின் நாயகன் ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் ஆதேஷ்பாலா. இவர் மார்ச் 2ல் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இவரின் பெற்றோர்களும் கலையுலக நட்சத்திரங்களே.

நடிகர் சிவராமன் – சுப்புலெட்சுமி நட்சத்திர தம்பதிகளின் மகனாவார். இவரது தந்தையார் பிரபல காமெடி நடிகர் சிவராமன் ஆவார். தாயார் சுப்புலெட்சுமி விசு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் B.A., செக்ரட்டரிஷிப் படித்தவர்.

விக்ரம் நடித்த சாமி படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக் கோட்டை, முண்டாசுப் பட்டி, இங்கிலீஷ் காரன், விந்தை, குருவி, வஜ்ரம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், ஜன்னலோரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாயம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பொண்டாட்டி மற்றும் நிக்குமா நிக்காதா போன்ற குறும்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். Take 1 shot 1 என்ற குறும்படத்தில் ஒரே ஷாட்டில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சந்தோஷ் நவீன் இயக்கியுள்ள ‘இராஜமாபுரம்’ என்ற படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.

ஷாம் ஒளிப்பதிவு செய்ய ரகு சரவணகுமார் இசையமைக்கிறார். Article 21 நிறுவனம் சார்பாக சந்தோஷ்குமார் தயாரித்துள்ளார்.

இதன் பர்ஷ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற DB MAMA ‘N’ PAPA FIESTA (SEASON 4) விழாவில் ராதிகா சரத்குமார், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார் ஆதேஷ் பாலா.

Aadhesh Bala turns hero in Rajamapuram

More Articles
Follows