தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கிறார்.
இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் மீண்டும் ஒரு மரியாதை.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்த இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசானது.
தற்போது சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ மற்றும் மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் பராதிராஜா.
இதனிடையில் ‘ஆத்தா’ என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார் பாரதிராஜப. பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா சூழ்நிலையால் ஆத்தா படம் கைவிடப்பட்டதாக பாரதிராஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான பாரதிராஜா அறிக்கையில்….
“15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால்.
உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின்கருவை நாடியுள்ளது ஆத்தா.
இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகின்றன.
புதிய அறிவிப்பு , புதிய தலைப்புடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது” இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bharathiraja announces his Aatha movie drop