பொம்பள கமல் ரம்யாகிருஷ்ணன்; ஆம்பள மனோரமா தம்பிராமையா… : விக்னேஷ்சிவன்

பொம்பள கமல் ரம்யாகிருஷ்ணன்; ஆம்பள மனோரமா தம்பிராமையா… : விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vignesh Shivanஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது…

`தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக உருவாக காரணம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான்.

நான் `ஸ்பெஷல் 26′ படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து, புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.

உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன்.

இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள்.

ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர். இவரை பொம்பள கமல்ஹாசன் என்று கூறலாம்.

அதேபோல் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவரை ஒரு ஆம்பள மனோரமா என்று கூறலாம். அந்த அளவுக்கு அவர் பிசியாக நடித்து வருகிறார்.

அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.” என்றார்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியதாவது…

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை.

அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது.

இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.

இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்றாலும் ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.

அயன் படத்தில் வருவது போல் எனர்ஜியான சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றார் ஞானவேல் ராஜா.

விக்னேஷ்சிவனை பிரதர் பிரதர் என அழுத்தமாக அழைத்த கீர்த்திசுரேஷ்

விக்னேஷ்சிவனை பிரதர் பிரதர் என அழுத்தமாக அழைத்த கீர்த்திசுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan and keerthy sureshஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையைமத்துள்ள இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட நாயகன் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பட நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது… நான் சூர்யாவின் ரசிகை. இன்று அவருடன் நடித்துவிட்டேன். என்றார்.

மேலும் பட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை பலமுறை பிரதர் பிரதர் என்று அழுத்தமாக அழைத்தே பேசினார்.

அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவன் பயப்படாதீங்க சிஸ்டர், நீங்க பாதுகாப்பத்தான் இருக்கீங்க” என்றார்.

என்ன ரகசியமோ? என்ன நடந்துச்சோ..?

கட்சியை பலப்படுத்த விரைவில் தமிழகத்தை ரவுண்ட் அடிக்கும் ரஜினி

கட்சியை பலப்படுத்த விரைவில் தமிழகத்தை ரவுண்ட் அடிக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanthஆன்மிக அரசியல் கட்சி அமைத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து தமிழக அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக ரஜினி மன்றம் பெயரில் பிரத்யேகமாக இணையதள முகவரியையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினிக்கு தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

இவையில்லாமல் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அனைத்து ரசிகர் மன்றங்களை ஒரே குடையில் கீழ் கொண்டுவர ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திக்கவுள்ளாராம் ரஜினிகாந்த்.

அப்போது சில பொதுக்கூட்டங்களில் பேசுவார் என்றும் கட்சியின் கொள்கை திட்டங்களை மக்கள் மத்தியில் வெளியிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

நஷ்ட பணத்தை ஜெய் திருப்பி தரவேண்டும்; பலூன் படத்தயாரிப்பாளர் போர்க்கொடி

நஷ்ட பணத்தை ஜெய் திருப்பி தரவேண்டும்; பலூன் படத்தயாரிப்பாளர் போர்க்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Jaiசினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு ஆகியோர் நடித்த ‘பலூன்’ படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது.

தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் பட இயக்குனர் சினிஷ் நான் மகிழ்ச்சியாக இல்லை என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தித்துள்ளார்.

இந்நிலையில், படத்தை தயாரித்த 70 எம்.எம். என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜெய் மீது புகார் மனு அளித்திருக்கிறது.

அதில் நடிகர் ஜெய் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், அவரால் ரூ.1.50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது..

பலூன் படத்தை 2017 ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 29-ஆம் தேதி தான் வெளியிட முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய் தான்.

* 2016, ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ஜெய் தேதிகளை சரிவர கொடுக்கவில்லை.

* பின்னர் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் டப்பிங்குக்கு கூட வராமல் மனஉளைச்சலை ஏற்படுத்தினார்.

* அவரது தொடர் டார்ச்சரால் இயக்குநர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.

கொடைக்கானலில் 20 நாட்கள் சூட் செய்வதற்காக செட் போட்டு ஜெய் வருவார் என காத்திருந்தோம். ஆனால் அவரை போனிலோ, நேரிலோ எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

* தினமும் குடித்துவிட்டு தான் சூட்டிங்குக்கு வருவார். நடிப்பில் கவனம் செலுத்தாமல் மெத்தனப் போக்குடன் இருப்பார்.

* அவரது இந்த தவறான நடவடிக்கையை நாங்கள் சுட்டிக் காட்டினோம். அதில் கோபமடைந்து அவர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.

இறுதியில் நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி என மொத்தமாக ரூ.1.50 அதிகமாகவே இவரால் செலவானது.

* எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஜெய் தான் காரணம். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இது எங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் தெரியும்.

* நஷ்ட தொகையான ரூ.1.50 கோடியை ஜெய் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு உண்டா.? ஏஆர்.ரஹ்மான் விளக்கம்

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு உண்டா.? ஏஆர்.ரஹ்மான் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and AR Rahmanசினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.

இதனை முன்னிட்டு சென்னையில் ஜனவரி 12-ம் தேதி ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

எனவே இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ஏஆர். ரஹ்மான்.

அப்போது சில கேள்விகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான பதிலளித்தார்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் நல்லது செய்ய சரியான தலைமை இல்லை என கருதி இருக்கலாம்.

ஆன்மிக அரசியல் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அவரது எண்ணம் நல்லதாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன்.

அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் உழைக்க வேண்டும்.” என்றார்.

ஆர்கே. நகரில் ஓட்டு விற்பனை பேச்சு; கமல் மீது பாய்ந்தது வழக்கு

ஆர்கே. நகரில் ஓட்டு விற்பனை பேச்சு; கமல் மீது பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanசென்னை ஆர்.கே.நகரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

பணநாயகம் வென்றதாக தினகரன் வெற்றி குறித்து எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது.

அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசனும் சமீப காலமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

சினிமா சூட்டிங்கில் கமல் பிசியாக இருப்பதால் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கமல் கருத்து தெரிவித்தார்.

அதில், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

ஆளும் அதிமுக கட்சி ஒரு ஓட்டுக்கு 6,000 என்றும் சுயேச்ட்சை வேட்பாளர் ஒரு ஓட்டுக்கு 20,000 என்று ஆர்.கே. நகரில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு தரப்பும் விலை நிர்ணயித்தனர். என கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராஜ் குமார் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார்.

இளங்கோவன் ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையில் சிம்பு, அனிருத் மீது வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows