தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
இதற்காக சம்பந்தபட்ட அந்த நிறுவனங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.
புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து வருகின்றன.
இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இல்லையெனில் புதிய படங்களை திரையிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி மார்ச் 2 வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் தியேட்டர்களில் பழைய படங்களையே திரையிடும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களை கவர தமிழகத்தில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் அந்த நடிகர்களின் படங்களை திரையிட உள்ளனர்.
அதன்படி மெர்சல், வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை திரையிடுவதால் அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Vijay Ajith Suriya fans were happy because of Producers Qube issue strike