RECORD MAKER RAJINI உலகளவில் ‘ஜெயிலர்’ படைத்த வசூல் ரெக்கார்ட்

RECORD MAKER RAJINI உலகளவில் ‘ஜெயிலர்’ படைத்த வசூல் ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியான நாள் முதலே உலகளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை கடந்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெகார்ட் மேக்கர் (Super star rajinikanth record maker) என பதிவிட்டுள்ளது.

ஜெயிலர்

Rajinikanth’s Jailer really collected at box office in its first week for 375 crore

‘ஜெயிலர்’ பட வெற்றியால் குஷியில் சிம்பு பட புரொடியூசர் பதம்குமார்

‘ஜெயிலர்’ பட வெற்றியால் குஷியில் சிம்பு பட புரொடியூசர் பதம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பதம் குமார். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தை தயாரித்தும் உள்ளார்.

இவர் பாவக் கதைகள் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டினார்.

தற்போது ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ப்ளாஷ்பேக் ஜெயில் காட்சியில்.. எனக்கு 30 எம்எல்ஏ ஆதரவு உள்ளது என்று ஒரு கைதி சொல்வார். அவர் தான் பதம்குமார்.

இதன் மூலம் இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு ரஜினி மற்றும் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ள தனது முதல் படமே ரஜினி படமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Dop and Director Padam Kumar happy with Jailer success

24 மணி நேரத்தில் ‘லியோ’ அர்ஜூன் கிளிம்ப்ஸ் படைத்த சாதனை

24 மணி நேரத்தில் ‘லியோ’ அர்ஜூன் கிளிம்ப்ஸ் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒரே நாளில் 15.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

leo movie arjun’s charactor Harold Das Glimpse one day 15.5 millions views Crossed

என் தகுதிக்கு மீறிய செயல்.; 8 படங்களை ——- பண்றேன்.; மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா

என் தகுதிக்கு மீறிய செயல்.; 8 படங்களை ——- பண்றேன்.; மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தன் திறமைகளை நிரூபித்து தற்போது சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.

இவரது காமெடிக்கு சிரிக்காதவர்களே இல்லை என்னும் அளவுக்கு காமெடியனாகவும் உயர்ந்து வருகிறார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 17 ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் பகுதி மக்களுக்கு நடமாடும் ஐ சி யு ஆம்புலன்ஸ் ஒன்றை தனது சொந்தப் பணத்தின் மூலம் வழங்கியுள்ளார்.

இது குறித்து பாலா பேசியதாவது..

“எனது தகுதிக்கு மீறிய செயலாக இந்த ஆம்புலன்ஸ் வழங்கியதை கருதுகிறேன். நிறைய பிரபலங்கள் நிறைய உதவிகளை செய்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்களும் செய்து வருகிறார்கள். அதை ஒப்பிடும்போது இது பெரிய விஷயம் இல்லை.

ஆனால் என்னுடைய சக்திக்கு மீறி என்னுடைய தகுதிக்கு மீறி நான் இந்த ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளேன்.

இந்த ஈரோடு மாவட்ட மலை பகுதிகளில் கிட்டத்தட்ட 12 கிராமங்களில் சுமார் 8,000 மக்கள் வசிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இரவில் புழு பூச்சி பாம்பு மற்றும் மிருகங்களால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் செல்ல வேண்டி உள்ளதாகவும் தங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் தேவை எனவும் தெரிவித்திருந்தனர்.

எனவே அவர்களின் கருத்தை மனதில் கொண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் பெற்ற வருமானத்தை கொண்டு இந்த ஆம்புலன்ஸை வழங்கியுள்ளேன்.

இந்த 2023 வருடத்திற்குள் இது போன்ற 10 ஆம்புலன்ஸ் வழங்க நினைக்கிறேன். அதற்கு மக்களுடைய ஆதரவு வேண்டும். மக்கள் ஆதரவினால் தான் நான் இன்று நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறேன்.

எனவே மக்களுக்காக அவர்கள் கொடுத்ததை நான் திருப்பி கொடுத்து வருகிறேன். மேலும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறேன்.

நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். எனது தாயார் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

எட்டு படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என கலாய்த்து விட்டு 8 படங்களை டவுன்லோட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

தற்போது சின்ன திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.”
என்றார் KPY பாலா.

KPY Bala donated ICU Mobile Ambulance to Erode Peoples

‘சந்திரமுகி’ பெஸ்டி நான்தான்.; வடிவேலு செய்த கலாட்டா வைரல்

‘சந்திரமுகி’ பெஸ்டி நான்தான்.; வடிவேலு செய்த கலாட்டா வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இதையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் எம் எம் கீரவாணியின் இசையில் வெளியாகி ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.

இந்நிலையில், ‘சந்திரமுகி -2’ படத்தில் வடிவேலுவின் டப்பிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், சந்திரமுகி படம் பத்து பாகம் வந்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான் என்று வடிவேலு கூறினார்.

வடிவேலு கூறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Vadivelu starts dubbing for Raghava Lawrence’s ‘Chandramukhi 2’

தளபதியுடன் இணையும் தல.; வெங்கட் பிரபு போடும் வேற லெவல் ஸ்கெட்ச்

தளபதியுடன் இணையும் தல.; வெங்கட் பிரபு போடும் வேற லெவல் ஸ்கெட்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 68’ திரைப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி 68

MS Dhoni to make his acting debut to vijay’s ‘Thalapathy 68’

More Articles
Follows