ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால் இந்தியன் 2 படம் அப்படியே நிற்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஷங்கர்.

இதனால் பொறுமையிழந்த ஷங்கர் வேறு ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது-

நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரிடமும் 2 ஹீரோ கதையை சொன்னதாகவும அவர்கள் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்ய முன்வந்திருக்கிறதாம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்.

விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கும் யோக(கி) பாபு

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கும் யோக(கி) பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Yogi Babu Salary Will Makes You Shockதமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு காட்டில் மழை பெய்து வருகிறது.

இவர் இல்லாமல் படங்கள் இல்லை என்னுமளவுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்.

விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும் இணைந்துள்ளார்.

தர்பார் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள நிலயில் யோகிபாபு 40 நாட்கள் கொடுத்துள்ளாராம்.

யோகிபாபு தற்போது எல்லாம் ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என கமிட் ஆகாமல் ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் என கமிட்டாகி நடித்து வருகிறாராம்.

மேலும் நயன்தாராவும் யோகிபாபுக்கு சிபாரிசு செய்வதாக சொல்லப்படுகிறது-

அப்போ இனி யோகி பாபுவை யோக பாபு என்றே அழைக்கலாம் தானே.. வாழ்த்துக்கள் ப்ரோ…

Comedy Actor Yogi Babu Salary Will Makes You Shock

தங்க மங்கை கோமதிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் உதவி

தங்க மங்கை கோமதிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis kind gesture to TN athlete Gomathi Marimuthuஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.

கடும் வறுமையை மீறி தங்கத்தை வென்றவர் என்பதால் பலரும் அவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோமதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

திருச்சியில் கோமதி வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்றவர்கள் ரூ. 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை கோமதியிடம் வழங்கியுள்ளனர்.

விஜய்சேதுபதியும் தன் பாராட்டுக்களை மொபைல் போனில் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathis kind gesture to TN athlete Gomathi Marimuthu

இண்டர்நேஷனல் பாலிடிக்ஸில் ‘குண்டு’ போடும் ரஞ்சித்-தினேஷ்

இண்டர்நேஷனல் பாலிடிக்ஸில் ‘குண்டு’ போடும் ரஞ்சித்-தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irandam Ulagaporin Kadaisi Gundu deals with International Politicsதனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் தினேஷ்.

இவரது நடிப்பில் “குக்கூ”, “விசாரணை” ஆகிய படங்கள் முக்கியமானவை.

கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்பொழுது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

“குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.

அதேசமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வடதமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.

அடுத்தடுத்து தமிழகம் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் தினேஷ்.

Irandam Ulagaporin Kadaisi Gundu deals with International Politics

விஜய் பட சூட்டிங்கில் தீ விபத்து; 50 லட்சம் மதிப்புள்ள செட் எரிந்தது

விஜய் பட சூட்டிங்கில் தீ விபத்து; 50 லட்சம் மதிப்புள்ள செட் எரிந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fire accident at Vijays Thalapathy 63 shooting setஅட்லி இயக்கிவரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று சென்னை அருகே போடப்பட்டது. இதன் மொத்த செலவு ரூ 50 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் செட் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.

அன்றைய தினம் யாரும் அங்கில்லை என்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Fire accident at Vijays Thalapathy 63 shooting set

அரவிந்த்சாமி, சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது

அரவிந்த்சாமி, சன்தோஷ் P.ஜெயக்குமார் இணையும் புதியபடம் துவங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ஒரு படத்தின் பூஜை நிகழ்வே பெரிய உற்சாகத்தைத் தந்தால் அந்தப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல கொண்டாட்டத்தை தரும் படமாகத்தான் அமையும். ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்குரிய படமாக பூஜை அன்றே உணரப்பட்டுள்ள படம் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. பூஜையில் படத்தின் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் P.ஜெயக்குமார், தயாரிப்பாளர் V.மதியழகன்,
இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் படத்தின் பூஜையில் கலந்துகொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் இயக்குநர் U.R ஜமீல், இயக்குநர் ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா, சக்திவேல் பிலிம் பேக்டரி B.சக்திவேலன், தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும்போதே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். அப்படியான எதிர்பார்ப்பை முதல் அறிவிப்பிலே ஏற்படுத்தியுள்ளது நடிகர் அரவிந்த்சாமி இயக்குநர் சன்தோஷ் P ஜெயக்குமார் கூட்டணி.

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். படத்தின் கதையை தன் போக்கிற்கு கொண்டு செல்லாமல் ரசிகனின் ரசனை அறிந்து கொண்டு செல்லும் போது அந்தப்படம் நிச்சயம் வெற்றிக்கோட்டை அடையும். அப்படியான படமாகத் தான் இந்தப்புதிய படம் துவங்கி இருக்கிறது. நடிகர் அரவிந்த்சாமி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றால் அந்தப்படம் கவனிக்கப் படும் படமாகத் தான் இருக்கும். டிடைக்டிவ் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தக்கதையில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். Etctera entertainment சார்பில் V.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதம் துவங்க இருக்கிறார்கள்.

காட்சிகளுக்கான உணர்வை பின்னணி இசையிலும் பாடல்களிலும் கச்சிதமாக கொண்டு வரும் டி.இமான் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.
பள்ளு ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பொறுப்பை பிரசன்னா ஜிகே ஏற்றுள்ளார். கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டைப்பயிற்சி தினேஷ் சுப்பராயன்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது. V.மதியழகன் இதுவரை தயாரித்தப் படங்களில் இந்தப்படம் தொழிழ்நுட்ப ரீதியாகவும் பிரம்மாண்ட படைப்பாக்கத்திலும் பெரிய படமாக உருவாக இருக்கிறது.

More Articles
Follows