கட்டை விரல் அகற்றம்.. மீண்டும் ஆப்ரேசன்..; திருமணம் செய்துக் கொள்ளாத பாவா லட்சுமணனின் பரிதாப நிலை

கட்டை விரல் அகற்றம்.. மீண்டும் ஆப்ரேசன்..; திருமணம் செய்துக் கொள்ளாத பாவா லட்சுமணனின் பரிதாப நிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தாலும் சிலரது பெயர் கூட நாம் நினைவுக்கு வராது.. சிலரது பெயர்கள் கூட நமக்கு தெரியாது.

அவர்கள் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன கேரக்டரில் மட்டுமே வந்து கொண்டு இருப்பார்கள்.

இவரை அந்த படத்தில் பார்த்திருக்கிறோம். இந்த படத்தை பார்த்திருக்கிறோமே என்று பலர் சொல்வதைக் கேட்டு இருப்போம்.

அப்படியான ஒரு நடிகர் தான் பாவா லட்சுமணன். லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் மம்முட்டி வீட்டில் வேலை செய்யும் பவா லட்சுமணன் என்றால் பலருக்கும் நிச்சயம் அறிந்திருக்கும்.

அதுபோல வடிவேல் உடன் பல படங்களில் நடித்திருக்கிறார். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வக்கீல் வண்டு முருகனுக்கு ஜூனியர் அட்வகேட்டாக இவரும் அல்வா வாசுவும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய ஒரு காலில் கட்டை விரல் மற்றும் அதற்கடுத்த இரண்டு விரல்கள் அகற்ற வேண்டிய கட்டாயத்தில் விரல்கள் எடுக்கப்பட்டு விட்டது. இன்னொரு காலிலும் கட்டை விரல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம்.

திருமணம் செய்துக் கொள்ளாமலேயே பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்து வரும் லட்சுமணன், சினிமாவில் பல படங்களில் புரொடக்ஷன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார்.

லட்சுமணனை நேரில் சந்தித்து மேற்கொண்டு சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்.

சினிமா பிரபலங்கள் பலர் அவரை பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்கள் சொல்வது, ” பாவா லட்சுமணன் கள்ளம், கபடம் இல்லாத குழந்தையாக பேசி சிரிக்கிறார். சில நெருக்கமானவர்களை பார்க்கும்போது பொங்கி அழுது விடுகிறாராம் லட்சுமணன்.

அவர் விரைவில் நலம் பெற்று மீண்டும் சினிமாவுக்கு திரும்பி நம்மை நகைச்சுவையால் மகிழ்விக்க காத்திருப்போம்..

Comedy Actor Bava Lakshmanan treatment updates

புற்றுநோயால் தனுஷ் பட நடிகர் மரணம்..! மருத்துவ உதவி மற்றும் இறுதி சடங்கு செய்த பிரபலம்..

புற்றுநோயால் தனுஷ் பட நடிகர் மரணம்..! மருத்துவ உதவி மற்றும் இறுதி சடங்கு செய்த பிரபலம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படகளில் துணை நடிகராக நடித்து வந்தவர் பிரபு.

இவர் நடிகர் தனுஷ் நடித்துள்ள படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

ஆதரவற்ற நிலையில் இருந்த அவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.

இந்நிலையில், துணை நடிகர் பிரபு காலமானார்.

அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகர் பிரபுவிற்கு மருத்துவ உதவிகள் செய்த இசையமைப்பாளர் டி.இமான் தான் பிரபுவின் இறுதி சடங்குகளை செய்தார்.

பிறகு, துணை நடிகர் பிரபு உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

டி.இமான்

supporting actor prabhu passes away

பணம் பெற்றவர் முதலாளி.. கொடுத்தவர் தொழிலாளி.; இப்படியாச்சே நிலைமை.! – கே.ராஜன்

பணம் பெற்றவர் முதலாளி.. கொடுத்தவர் தொழிலாளி.; இப்படியாச்சே நிலைமை.! – கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்…

”ஈடாட்டம் என்றால் என்ன? பொருள் என படக் குழுவினரிடம் கேட்டேன். நமக்கு போராட்டம் தெரியும். அதன் பிறகு சூதாட்டம் தெரியும். அதற்கு நான் செல்வதில்லை. சிலம்பாட்டம் தெரியும். இந்த ஆட்டங்களை எல்லாம் தெரிந்து கொண்ட எனக்கு,’ ஈடாட்டம்’ என்றால் என்ன? என்று தெரியவில்லை.

அப்போது அவர்கள், ”பொறாமை.. வஞ்சகம்.. வஞ்சனை.. பொல்லாப்பு..” என அர்த்தம் சொன்னார்கள்.

மனதில் வஞ்சனை வைத்திருப்பவர்கள் மனிதர்களே இல்லை. மனிதருக்குரிய பண்பும் அல்ல. மனிதநேயம்.. மனித தர்மம்… மனிதாபிமானம்.. இந்த மூன்றும் யாருக்கு இருக்கிறதோ… அவர்கள் தான் மாமனிதன்.

தான் மட்டும் வாழ வேண்டும் என நினைப்பது தவறில்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவதும் தவறல்ல. இது ஆத்மா. இதை கடந்து.. நானும் வாழ வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களும், என்னை நம்பி இருப்பவர்களும் வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்.

ஆனால் என்னைப் பற்றி கவலை இல்லை. நாட்டை வாழ வைக்க வேண்டும்.. மக்களை வாழவைப்பதற்காக என்ன தியாகம் வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பது.. மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.. பெருந்தலைவர் காமராஜரை போன்ற மகாத்மாக்கள். நாம் மகாத்மாவாக வேண்டும். இந்த காலத்தில் மகாத்மாவாக முடியாது. ஆனால் புண்ணியத்மா ஆகலாம்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். குடியால் கெட்டுப்போன ..அதனால் தடுமாறுகிற ஒரு இளைஞனின் கதையை அற்புதமாக சொல்லி இருக்கிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மகனான ஸ்ரீ ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்த விழாவிற்கு வருகை தந்து, என்னை சந்தித்து ‘வாங்க முதலாளி’ என அன்புடன் அழைத்தார். ஆனால் தற்போது தயாரிப்பாளராகிய நாங்கள் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறோமோ… அவர்கள் முதலாளிகளாகிவிடுகிறார்கள்.

நாம் தொழிலாளிகளாகி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களையும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இணைந்து தான் உருவாக்குகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குநர் ஈசன் நன்றி கடன்பட்டிருக்கிறார். தன்னுடைய பேச்சில் வளர்ப்புத் தாயை மட்டும் குறிப்பிடாமல்…, இப்படத்தை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்த கஜபதியையும் அவர் குறிப்பிட்டார்.

சிறிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்கள் அனைத்தும் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசும், மாநில அரசும் திட்டம் தீட்டி அவர்களை காக்க வேண்டும்.

இதனை ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறேன். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்கு வருமான வரி துறையினரின் சோதனையை அனுமதிக்கிற மத்திய அரசு.. தோல்வி அடைந்து காணாமல் போன தயாரிப்பாளரை பற்றியும் விசாரிக்க வேண்டும். மத்திய அரசு காட்டில் உள்ள வனவிலங்குகளை கண்டறிவதற்காக திட்டம் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது நல்ல திட்டம் தான். விலங்குகளை காப்பாற்றுகிற இந்த திட்டத்தை போல்…, 15 ஆண்டு காலமாக திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் நிலை என்ன? அவர்களின் குடும்பம் என்னானது? அது தொடர்பாகவும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசும் திரைப்படத்துறை சார்பாக வரி வருவாயை ஈட்டுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு தொழிலாக அங்கீகரிக்கவில்லை.

‘ஈடாட்டம்’ வெறியாட்டமாக மாறாமல்.. வெற்றியாட்டமாக மாறி.. மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஈடாட்டம்

Producers life status worst but Actors were happy says K Rajan

கடன் கொடுக்கும் வரை கடவுள்.. கொடுத்த பின்… ; நன்றி கெட்ட உலகமிது – பேரரசு

கடன் கொடுக்கும் வரை கடவுள்.. கொடுத்த பின்… ; நன்றி கெட்ட உலகமிது – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்…

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜான் பீட்டரிடம் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். ஒரு பாடகர் இருக்கிறார். இயக்குநர் இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இப்படி அவரிடம் பல முகங்கள் இருக்கிறது.

அவரிடம் இருக்கும் நல்ல மனசின் காரணமாகத்தான் சிக்கலான தருணத்தில் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீயை சீரியல்களில் பார்த்திருக்கிறேன். அருமையாக நடிக்கிறாரே…! இவர் ஏன் சினிமாவுக்கு வரவில்லை? என யோசித்திருக்கிறேன்.

அவரை சந்தித்து கேட்டபோது, ‘வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால் அதன் பிறகு தான் அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் என்றே எனக்கு தெரியும்.

தந்தையின் பெயரை சொல்லி வாய்ப்பு கேட்காமல், தன் சுய முயற்சியால் இந்த உயரத்தை அவர் தொட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஸ்ரீயிடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பயன்படுத்திக் கொண்டு, அவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும். ஏதோ ஒரு தடை இருக்கிறதாக நினைக்க வேண்டாம். ஏனெனில் ஒரு கலைஞருக்கு அவருடைய தன்மானம் தான் பெரிய தடை. தன்மானத்தை அதிக அளவில் வைத்திருந்தால் வாய்ப்பு கிடைக்காது. தன்மானத்தை கைவிட்டால், நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தப் படத்திற்கு பாடல் எழுதி இருக்கும் பாடலாசிரியர் இளைய கம்பன் என்னுடைய நண்பர். திறமையானவர். இளைய கம்பன் என்ற பெயரே அவர் மீது எனக்கு இருக்கும் பெரிய ஈர்ப்பு.

திரையுலகில் கதாசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். ஏனெனில் ஒரு பாடலுக்கு இசை அமைப்பாளர் மெட்டமைத்தாலும்.. பின்னணி பாடகர்கள் பாடினாலும்.. அதற்கு கதையை அறிந்து… சூழ்நிலை அறிந்து… பாடல் வரிகளை எழுதும் கவிஞர்கள்தான் முக்கியம்.

படமே எடுக்காமல் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டிருக்கும் மோசடி பேர்வழிகளை… ‘பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் ‘என ஊடகங்கள் விவரிக்கிறது.

இதனை நிஜமாகவே படமெடுக்கும் இயக்குநர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்குகிறது. இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் திரைப்பட இயக்குநர் என்ற வார்த்தையை இணைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் வசனம் என்னைக் கவர்ந்திருக்கிறது. சட்டத்திற்கும் போலீஸிற்கும் நல்லவர்கள் தான் பயப்படுகிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசுக்கு தர வேண்டியது கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியாக உலா வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பது உண்மைதான்.

சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசை மதிப்பதே இல்லை. யார் ஆட்சி செய்தாலும் போலீஸ், போலீசாக இருக்க வேண்டும்.

கடன் கொடுப்பவர்கள் பணத்தை கொடுக்கும் வரை கடவுளாக தெரிகிறார்கள். கடன் கொடுத்த பிறகு கடன்காரன் கடன் கேட்டு வந்தால், ‘சகுனம் சரியில்லை’ என்று கடன் காரன் கூறுகிறான். இதுபோன்ற நன்றிகெட்ட சூழலில் தான் நான் தற்போது வாழ்கிறோம்.

குடியால் பாதிக்கப்படும் இளைஞனின் கதையை இயக்குநர் ‘ஈடாட்டம்’ மூலமாக கொடுத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

ஈடாட்டம்

We are living in worst world says Perarasu

சமூகத்துக்கு நல்லது நடக்குமென்றால் நான் செல்வேன்.. – ARR சிஸ்டர் ரைஹ்னா

சமூகத்துக்கு நல்லது நடக்குமென்றால் நான் செல்வேன்.. – ARR சிஸ்டர் ரைஹ்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரைஹ்னா பேசுகையில்….

” பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு நான் செல்வதில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தான் செல்கிறேன். ஏனெனில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு என்னாலான ஒத்துழைப்பை வழங்குவேன்.

சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்தால் போதும். அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நான் எதிர்பார்ப்பதுமில்லை. தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, எழில் போன்றவர்கள் இங்கு வருகை தந்து பட குழுவினரை வாழ்த்தி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றால் இது தான் ஆரோக்கியமான சூழல் என கருதுகிறேன்.

இசையப்பாளர் ஜான் பீட்டர் இசையமைத்த இரண்டு பாடல்கள் இங்கு திரையிடப்பட்டது. இரண்டும் அற்புதமாக இருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

அவர் இதில் பணியாற்றி இருப்பதால் இந்த படம் நேர்த்தியாக உருவாகி இருக்கும். இரண்டு பாடல் காட்சிகளிலும் அவருடைய உழைப்பு தெரிந்தது. இந்தப் படம் அற்புதமான கதையை கொண்டிருக்கிறது.

ஒருவன் குடித்துவிட்டு எந்த அளவிற்கு பிரச்சனையை செய்ய முடியும். குடித்த பிறகு.. அவனுடைய மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது… இதனால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை… இயக்குநர் படமாக்கி இருப்பதால், இதனை பாராட்டுவதற்காகவே இங்கு வருகை தந்திருக்கிறேன். இதற்காக பட குழுவினரை வாழ்த்துகிறேன்.

பொதுவாகவே சமூகத்துக்கு ஏதேனும் நல்லது நடக்கிறது என்றால்… உடனே நான் அங்கு சென்று விடுவேன். இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகனான ஸ்ரீக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்”.என்றார்.

ஈடாட்டம்

If any good thing going to happen i will be there says Rahaina

2023ல் 4 ஹிட்டு.; சின்ன படங்கள்தான் சினிமாவை இயங்க வைக்கிறது – எழில்

2023ல் 4 ஹிட்டு.; சின்ன படங்கள்தான் சினிமாவை இயங்க வைக்கிறது – எழில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் எழில் பேசுகையில்…

” சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதில்லை என காதல் சுகுமார் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் வெற்றி பெற்ற நான்கு திரைப்படங்களும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள்தான்.

சின்ன பட்ஜெட் படங்கள் தான் இந்தத் துறையை ஆரோக்கியமாக இயங்க வைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள் தான் புதிய இளம் திறமையாளர்களின் கனவுகளை நனவாக்குகிறது.

ஈசன் போன்ற ஏராளமான புது இயக்குநர்கள் அறிமுகமாவதற்கு உதவி செய்வது சின்ன பட்ஜெட் படங்கள் தான். ஈடாட்டம் திரைப்படத்தை படக்குழுவினர் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தின் முன்னோட்டம்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்குவது போல் அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஈசன் ஈடாட்டத்தை உருவாக்குவதற்காக பட்ட கஷ்டத்தை கேட்கும் போது சினிமா மீது ஒரு பயம் வருகிறது. இவற்றையும் கடந்து இப்படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஈடாட்டம்

Low budget movies were very stronger says Ezhil

More Articles
Follows