தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
அப்போது அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் நடைபெற்று வந்தது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.
போராட்டங்கள் 100வது நாளை எட்டியும் மக்களின் உணர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.
எனவே தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர்.
பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
(இந்த துப்பாக்கி சூட்டுக்கு அந்த தாசில்தார் அனுமதி அளித்ததாக கூறப்பட்டது)
துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். (அவர்கள் இந்நாள் வரை பாதிப்பில் உள்ளனர் என்பதை முத்துநகர் படுகொலை படம் சித்தரித்து இருந்தது.)
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை காண சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அப்போது இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். எனவே தான் இந்த கலவரம் உருவானது எனவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.
எனவே விசாரணை அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் முக. ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
இந்த அறிக்கையில்..
“போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல்.
தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடினர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி தயாரித்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விசாரணை அறிக்கையை பார்த்த பின்பு ரஜினிகாந்த் என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.
“தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரம் செய்தார்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கொளுத்தினார்கள், காவல்துறையை தாக்கினார்கள் என்று காவல்துறைக்கு வக்காளத்து வாங்கிய @rajinikanth அவர்கள் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கைக்கு பின்பு என்ன சொல்லப்போகிறார் https://t.co/xuniruzn6T https://t.co/RenMsXia6m
Director Lenin Bharathi question to Actor Rajinikanth