தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அதில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினி.
அவர் பேசும்போது…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே.
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர்.
உளவுத்துறை சரியான தகவலை முன்பே கொடுத்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இறுதியாக சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.
சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பிரச்சினையாகும்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்கள் ஆலையை திறக்க நீதி மன்றம் செல்ல நேரிடும்.
நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது
நீதிபதிகளும் மனிதர்களே. அவர்கள் அனுமதி கொடுக்கமாட்டார்கள்.” என்று பேசினார்.
Rajinikanth speech about Tuticorin Sterlite protest