தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் அவர்கள் நான் என்ற படம் மூலம் டைரக்டர் ஆனார்.
இதனையடுத்து அமரகாவியம் என்ற படத்தை எடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் விஜய் ஆண்டனியை வைத்து எமன் படத்தை இயக்கினார்.
இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஜீவா சங்கரிடம் சில கேள்விகளை கேட்டபோது அவர் கூறியதாவது…
நான், எமன் உள்ளிட்ட படங்கள் சீரியஸ் படங்களாகவே உள்ளது. ஏன் என்றதற்கு?
அடிப்படையிலேயே நான் சீரியஸ் டைப்தான். எனவே எனக்கு வருகிற தெரிகிற விஷயத்தை பெஸ்ட்டாக கொடுக்க நினைக்கிறேன்.
முந்தைய காலத்து கிராமத்து மனிதர்களின் போட்டோக்களை பார்த்தபோது ஒரு மீசை ஸ்டைல் பிடித்து இருந்தது.
எனவேதான் அதே போன்ற மீசையை வைத்தேன். மற்றபடி சிங்கம் படத்தில் ஸ்டைல் மீசைக்கும் இதற்கு சம்பந்தமில்லை.
சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு படங்களை இயக்க உள்ளேன். சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.
Director Jeeva Shankar about his yaman movie