நெகட்டிவ் டைட்டிலை விட்டு ‘தலைவர்’ பெயரில் விஜய் ஆண்டனி

நெகட்டிவ் டைட்டிலை விட்டு ‘தலைவர்’ பெயரில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ மற்றும் ‘எமன்’ ஆகிய நெகட்டிவ் படத்தலைப்புகளில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியவர் விஜய் ஆண்டனி.

இவரின் அடுத்த படத்தலைப்பும் வித்தியாசமான தலைப்புடன் வந்தாலும், ஒரு பாசிட்டிவ்வாக, மாபெரும் தலைவரின் பெயரை அவர் படத்திற்கு வைத்துள்ளார்.

தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான ‘அண்ணாதுரை’ யின் பெயரை வைத்திருக்கிறார்.

‘ஐ பிச்சர்ஸ்’ சார்பில் ஆர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்கவிருக்கிறார்.

இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கும் அண்ணாதுரையின் வாழ்க்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறப்படுகிறது.

மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இன்னும் இரண்டு வாரத்தில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து

இன்னும் இரண்டு வாரத்தில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayவிஜய் நடித்த பைரவா படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ளது.

இப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தி வந்துள்ளது.

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் நடித்த துப்பாக்கி படத்தின் சிறப்பு காட்சியை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் திரையிட உள்ளதாம்.

வருகிற பிப்ரவரி 23ம் தேதி இதற்கான காட்சி நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Jazz Cinemas plan for special screening of Thuppakki on Feb 23d 2017

JAZZ CINEMAS (@jazzcinemas)
A treat for all #Thalapathy fans!Mass re-entry of #Thuppakki as #Playback winner! @actorvijay @MsKajalAggarwal @ARMurugadoss @Jharrisjayaraj

ரஜினியை நடிக்க வைக்க ராஜமௌலியின் ராஜதந்திரம்

ரஜினியை நடிக்க வைக்க ராஜமௌலியின் ராஜதந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Rajamouliபாகுபலி2 படத்தை தொடர்ந்து இந்தியாவின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் கதையை ராஜமௌலி இயக்கவுள்ளதாக வந்த செய்தியை முன்பே பார்த்தோம்.

இந்த படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கவிருக்கிறாராம்.

பாலிவுட்டில் இருந்து அமீர்கான், மல்லுவுட்டில் இருந்து மோகன்லாலை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் ராஜதந்திரம் செய்துவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அப்படியானால், இப்படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SS Rajamouli plans to commit Rajinikanth for his Mega project

பைரவா படக்குழுவை மகிழ்வித்த இளையதளபதி

பைரவா படக்குழுவை மகிழ்வித்த இளையதளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

C39UkkIWMAA95Fhபரதன் இயக்கி விஜய் நடித்த பைரவா படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் ஓர் இடத்தில் கூடினர்.

அப்போது கீர்த்தி சுரேஷ், டேனியல் பாலாஜி, இயக்குனர் பரதன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய கையால் தங்கசெயின்களை பரிசாக அளித்துள்ளார் விஜய்.

இளையதளபதியின் இந்த நடவடிக்கையால் தங்கள் இதயம் மகிழ்ந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

 

C39Uk6bXAAE1OrM

C39UmsDWMAAxyn3

 

பிரபுதேவாவுடன் இணையும் பிரபல மலையாள நடிகை

பிரபுதேவாவுடன் இணையும் பிரபல மலையாள நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yanga mungபிரபுதேவா தயாரித்து நடித்த தேவி படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து விரைவில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு எங் மங் சங் என்று பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை எம்.எஸ். அர்ஜின் இயக்க, வாசன் விஷ்வல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒளிப்பதிவை குருதேவ் கவனிக்க, அம்ரீஷ் இசையைமைக்கிறார்.

இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘மக்கள் ஆட்டு மந்தை அல்ல…’ சசிகலாவை எதிர்க்கும் கமல்

‘மக்கள் ஆட்டு மந்தை அல்ல…’ சசிகலாவை எதிர்க்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanதமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில் முதல்வருக்கு கமல் பகிரங்கமாக தனது ஆதரவை அளித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான ஓர் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது…

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா குறித்து எனக்கு எந்த பாரபட்சமும் கிடையாது.

சசிகலாவின் திறமை குறித்து எதுவும் தெரியவில்லை. மறைந்த முதல்வருடன் அவர் இருந்துள்ளார். அதுவே அரசியலுக்கான தகுதியாகுமா ?

எனவே ஜல்லிக்கட்டு மற்றும் மற்ற விவகாரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறேன்.

அவருடன் கைகூட குலுக்கியது இல்லை. அவர் என் நண்பரும் இல்லை.

ஓ.பன்னீர் செல்வம் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. அவர் திறமையாளர். அவரது ஆட்சி தொடர வேண்டும். என்றார்.

மேலும், தாங்கள் ஆட்டு மந்தை இல்லை என்றும், தங்களை மேய்க்க மேய்ப்பர் ஒருவர் தேவையில்லை.

நாட்டை எவ்வாறு ஆள வேண்டும் என்பது தெரியாதவர்கள், அந்த இடத்திற்கு வரக்கூடாது. சசிகலா மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். என்றும் விமர்சித்துள்ளார் கமல்ஹாசன்.

More Articles
Follows