தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்ஜிஆரின் இலட்சிய திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி பலரின் கனவை நிறைவேற்றி இருக்கிறார் மணிரத்னம்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் மணிரத்னம்.
அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், வெண்பல கீதையன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலாக ‘பொன்னி நதி….’ இரண்டாவது பாடலான ‘சோழா சோழா…’ ஆகியவை வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
இந்த நிலையில் இதில் நடித்த சீனியர் விக்ரம், ஜெயராம், சரத்குமார், பிரபு, கார்த்தி ஆகியோரை விட ஜெயம் ரவிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஏனென்றால் மற்ற நடிகர்களை விட ஜெயம் ரவி அதிக நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் அவரின் கேரக்டர் தான் ‘பொன்னியின் செல்வன்’ என்றும் கூறப்படுகிறது.
இது தயாரிப்பு நிறுவனத்துக்கே வெளிச்சம்.
Did Jayam Ravi get more salary in Ponniyin Selvan?