தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இவரது மேடை நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். இதற்கு காரணம் இவர் மேடையில் பாடிக் கொண்டே ஆடுவார் ஆடிக்கொண்டே பாடுவார்.
அங்கு கூடி இருக்கும் மக்களை எப்போதும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைப்பார். அந்த அளவு எனர்ஜியாக இவரது நிகழ்ச்சிகளும் பாடல்களும் எப்போதும் அமைந்திருக்கும்.
இவரது இசையில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 42வது படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இதனிடையில் இன்று அக்டோபர் 9ஆம் தேதி கமல்ஹாசன் முன்னிலையில் ‘ஓ பெண்ணே…’ என்ற இசை ஆல்பம் இன்று வெளியானது.
இதற்கான விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது..
“நான் சூர்யா 42 படத்திற்கு இசையமைத்து வருகிறேன் சிறுத்தை சிவா இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக வித்தியாசமான முறையில் 10 மொழிகளில் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருக்கும். படமும் மிகப் பிரம்மாண்டமாக மாஸாகக உருவாகி வருகிறது,” என தெரிவித்தார் DSP.
Devi Sri Prasad talks about Suriya 42