‘சூர்யா 42’ குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்

‘சூர்யா 42’ குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இவரது மேடை நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். இதற்கு காரணம் இவர் மேடையில் பாடிக் கொண்டே ஆடுவார் ஆடிக்கொண்டே பாடுவார்.

அங்கு கூடி இருக்கும் மக்களை எப்போதும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைப்பார். அந்த அளவு எனர்ஜியாக இவரது நிகழ்ச்சிகளும் பாடல்களும் எப்போதும் அமைந்திருக்கும்.

இவரது இசையில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 42வது படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இதனிடையில் இன்று அக்டோபர் 9ஆம் தேதி கமல்ஹாசன் முன்னிலையில் ‘ஓ பெண்ணே…’ என்ற இசை ஆல்பம் இன்று வெளியானது.

இதற்கான விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது..

“நான் சூர்யா 42 படத்திற்கு இசையமைத்து வருகிறேன் சிறுத்தை சிவா இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக வித்தியாசமான முறையில் 10 மொழிகளில் படமாக்கி வருகிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருக்கும். படமும் மிகப் பிரம்மாண்டமாக மாஸாகக உருவாகி வருகிறது,” என தெரிவித்தார் DSP.

சூர்யா 42

Devi Sri Prasad talks about Suriya 42

மீண்டும் எழுந்த ‘நானே வருவேன்’.; தியேட்டர்கள் அதிகரிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் எழுந்த ‘நானே வருவேன்’.; தியேட்டர்கள் அதிகரிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிக பிரம்மாண்டமாக உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் 5 மொழிகளில் வெளியானது.

இதற்கு முந்தைய நாள் செப்டம்பர் 29-ம் தேதி ‘நானே வருவேன்’ படம் வெளியானது.

தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கி நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

ஹீரோ வில்லன் என இரு வேடங்களில் நடித்து வித்தியாசமாக நடிப்பு கொடுத்திருந்த தனுஷ் ஒரு நடிப்பு அசுரன் தான் என ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

முதல் நாளிலேயே இந்த படம் நல்ல வசூலை அள்ளியது. அதன் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ அலை அதிக அளவில் காணப்பட்டதால் ‘நானே வருவேன்’ படம் பின்னடைவு சந்தித்ததாக வதந்திகள் கிளம்பியது.

ஆனாலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

குறைந்த செலவில் இந்த படம் உருவானதாலும் தற்போது நல்ல வசூல் கிடைத்திருப்பதாலும் தயாரிப்பு தரப்பும் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் தியேட்டர்களும் அதிகரித்து வருவதால் பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

அக்டோபர் 7ஆம் தேதி பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ‘நானே வருவேன்’ படத்திற்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

Naane Varuven movie pick up recent updates

சத்யஜோதி – ஹிப்ஹாப் ஆதி 3வது முறையாக கூட்டணி.; இப்போவாச்சும் வெற்றி கிட்டுமா.?

சத்யஜோதி – ஹிப்ஹாப் ஆதி 3வது முறையாக கூட்டணி.; இப்போவாச்சும் வெற்றி கிட்டுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘சிவகுமாரின் சபதம்’ & ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார் ஹிப்ஹாப் ஆதி.

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. விமர்சன ரீதியாகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இருந்தபோதிலும் தற்போது மூன்றாவது முறையாக ஹிப் ஹாப் ஆதி மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு..

சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா நாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக ‘வீரன்’ அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஹிப்ஹாப் தமிழா,
ஒளிப்பதிவு: தீபக் D மேனன்,
எடிட்டிங்: GK பிரசன்னா,
கலை: NK ராகுல்,
ஸ்டண்ட்ஸ்: மகேஷ் மாத்யூ,
விளம்பர வடிவமைப்பு: டனே ஜான் (Tuney John),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One),
படங்கள்: அமீர்,
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் இசை, டீசர், ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.

‘வீரன்’ படத்தைத் சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்து இருக்கின்றனர்.

Hip hop Aadhi Veeran shooting wrapped up

திருப்பூர் சப்-கலெக்டராக காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நியமனம்

திருப்பூர் சப்-கலெக்டராக காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நியமனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் நடைபெற்ற குடிமைப்பணி (UPSC) தேர்வு முடிவுகள் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியானது.

இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை (Lal Bahadur Shastri National Academy of Administration) பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் பயிற்சி காலம் முடிந்த பிறகு வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.

அதன்பின்னர் பல்வேறு அரசுத் துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்தவர் ஸ்ருதன்ஜெய் நாராயணன். இவர் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார்.

இந்த நிலையில் அவர் திருப்பூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன்ஜெய் நாராயணன்.

இவர் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ல் வெளியான தேர்வு முடிவுகளில் 75-வது ரேங்க் பெற்றவராவார் ஸ்ருதன்ஜெய்.

Actor Chinni Jayanth son Sruthan Jai appointed as tirupur district sub collector

முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியான சிம்பு பட நடிகை

முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியான சிம்பு பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தை இயக்கியவர் முத்தையா.

இவர் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் படமும் வழக்கம் போல கிராமத்து மண்வாசனை கலந்த மசாலா திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பட நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஆரியா 34 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ்.

இந்த படத்தை ட்ரம்ப் ஸ்டிக் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இத்தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆரியா 34

Arya 34 mass rural action movie shooting started with pooja today.

@arya_offl @SiddhiIdnani @dir_muthaiya @VelrajR @gvprakash #AnalArasu @DrumsticksProd @ZeeStudiosSouth @teamaimpr

நிவின்பாலி – அஞ்சலி பட டைட்டிலுக்கு நேரம் குறித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்

நிவின்பாலி – அஞ்சலி பட டைட்டிலுக்கு நேரம் குறித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின்பாலி.

இவர் ‘நேரம்’, ‘பிரேமம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.

தற்போது நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தங்க மீன்கள், பேரன்பு’ புகழ் ராம் இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.

‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், புரொடக்‌ஷன் நம்பர் -7 ஆக இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடி, கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

சென்னை – கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், படத்தின் டைட்டில் அக்டோபர் 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nivin Pauly Anjali movie title announcement updates

More Articles
Follows