சூர்யா 42 ஃப்ளாஷ் பேக் பகுதிக்கான சூட்டிங் எப்போது? தயாரிப்பாளரின் அப்டேட் இதோ

சூர்யா 42 ஃப்ளாஷ் பேக் பகுதிக்கான சூட்டிங் எப்போது? தயாரிப்பாளரின் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கிரீன் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்செயன், சூர்யா 42 பற்றிய முக்கிய அப்டேட்டை வெளியிட்டார்.

பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு 60 முதல் 80 நாட்கள் வரை நடைபெறும் என்று தனஞ்செயன் கூறினார்.

படத்திற்காக மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூர்யா 42 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதாரங்களின்படி, சூர்யா இந்த படத்தில் பல தோற்றங்களில் மற்றும் பல கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Latest exciting updates of ‘Suriya 42’ from production side

ரஜினியுடன் முதன் முறையாக இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்

ரஜினியுடன் முதன் முறையாக இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ரஜினியுடன் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை, செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்படும் என்றும், படக்குழுவினர் விரைவில் அங்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால் , விக்ராந்த் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் படபிடிப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

National Award winning Tamil actor joins Superstar Rajinikanth for the first time

‘மஸ்காரா போட்டு மயக்குன பிரியன் இனி ஹீரோவாகி மயக்க வருகிறார்

‘மஸ்காரா போட்டு மயக்குன பிரியன் இனி ஹீரோவாகி மயக்க வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் பிரியன்.

இவர் ‘அரணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.

நாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK
பாடல்கள் – பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா
கலை – பழனிவேல்
ஸ்டண்ட் – Rugger ராம்குமார்
நடனம் – ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரியன்.

படம் பற்றி இயக்குநர் பிரியன் பகிர்ந்தவை…

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது.

ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.

திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி. ” என்றார்.

Lyricist Priyan turns hero in Aranam

கேள்வி கேட்டா பயம்.. மைக் கொடுத்தா மயக்கம்.. – நடிகர் புகழ்

கேள்வி கேட்டா பயம்.. மைக் கொடுத்தா மயக்கம்.. – நடிகர் புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சினிமா பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏப்ரல் 4ல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

நடிகர் புகழ் பேசியதாவது..

பத்திரிகையாளர்கள் என்றாலே ஒரு பயம்தான் எனக்கு, யாராவது ஏதாவது கேள்வி கேட்டுட்டா எனக்கு படபடன்னு வந்துரும் சும்மா அதுவும் மைக்க கொடுத்தாலே மயக்கம் வந்துரும்..

அப்படி இருக்க கவிதா அக்கா, தங்கம் நம்ம பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக ஒரு மருத்துவ முகாம் நடத்தணும்னு கூப்பிட்டாங்க சரிக்கா வரேன் என்றேன்.

ஏன்னா ஒரு விஷயத்தை மக்களிடம் எப்படி சேர்க்க வேண்டும் என்பதில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் போராடுகிறார்கள்.. நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

தற்பொழுது ரிலீசாகிய எனது அயோத்தி படத்தைக் கூட நல்ல முறையில் எழுதி இருந்தார்கள்.. ஆனால் யாருக்கும் என்னால் நன்றி கூற இயலவில்லை.. அதனால் இன்று எல்லோருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்..

என்னைப் போன்று வளர்ந்து வருபவர்களுக்கு துணை நிற்கிறீர்கள் அதற்கு மிகுந்த நன்றி.

அடுத்து ஆகஸ்ட் 16, 1947 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் அதற்கும் உங்களுடைய சப்போர்ட் தேவை.. அவர்களுக்கு என்றுமே ஒரு சகோதரனாய் இருப்பேன்.. மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறினார்.

புகழ்

CWC fame Actor Pugazh speech about Journalists

வெற்றிமாறன் அடுத்து கையில் எடுக்க போகும் ப்ராஜக்ட் இதுவா? இது நம்ம லிஸ்ட்ல இல்லயே..!

வெற்றிமாறன் அடுத்து கையில் எடுக்க போகும் ப்ராஜக்ட் இதுவா? இது நம்ம லிஸ்ட்ல இல்லயே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் பாகத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ‘விடுதலை 2’ கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

‘விடுதலை 2’ முடிய இன்னும் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு உள்ளது.

படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் படம் திரைக்கு வரும் என்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் சூரியாவின் வாடிவாசல் படபிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாடிவாசல் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை 2 பணிகள் தொடங்க இருப்பது ரசிகர்களுக்கு ஆச்ச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vetrimaaran to resume shooting of ‘Viduthalai 2’ before ‘Vaadivaasal’ – Details

இடைவெளி இல்லாமல் ரெடியானார் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

இடைவெளி இல்லாமல் ரெடியானார் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிகிலோனா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

டிகிலோனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்தானமும், இயக்குநர் கார்த்திக் யோகியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘வடக்குபட்டி ராமசாமி’.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

படப்பிடிப்பில் இருந்து ஒரு புதிய படத்தை ஒன்றைப் பகிர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

மேலும், ‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் இடைவேளையின்றி தொடர்ந்து 63 நாட்கள் படமாக்கப்பட்டு, மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Santhanam starrer ‘Vadakupatti Ramasamy’ shoot wrapped up

More Articles
Follows