இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஹார்ட் டிஸ்கை திருடி புதிய படம்.; யோகிபாபு படத்திற்கு கோர்ட் தடை

இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஹார்ட் டிஸ்கை திருடி புதிய படம்.; யோகிபாபு படத்திற்கு கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மணி’ என்ற பெயரில் ஒரு திரைப்பட உருவானதாகவும் அந்த படத்தின் முழு காப்பியை கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது அதை ஒரு நபர் திருடி ‘மணி’ என்ற படத்தை ‘தாதா’ என்ற பெயரில் மாற்றி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதை திருட்டு விவகாரம் தான் பெரிதாக பேசப்பட்டது.

தற்போது ஒரு படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் அந்த ஹார்ட் டிஸ்கை திருடி மற்றொரு பெயரில் திரையிட நினைப்பதெல்லாம் என்ன வகையான ——– என்று சொல்ல முடியும்.?

ஓரின தினங்களுக்கு முன் ‘தாதா’ என்ற பெயரில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்த படத்தின் நாயகன் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை. இந்தப் படத்தில் நடித்த லொள்ளுசபா மானோகர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் யோகி பாபு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து யோகி பாபு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது… “நான் ‘மணி’ என்ற படத்தில் தான் நடித்தேன். ‘தாதா’ படத்தில் நடிக்கவில்லை.

4 காட்சிகள் மட்டும்தான் படத்தில் வருவேன். என்னை நம்பி யாரும் படத்தை வாங்க வேண்டாம் என்று யோகி பாபு சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘மணி’ திரைப்படத்தின் COMPUTER HARD DISK’யினை திருடிய வழக்கு சென்னை சைதாப்பேட்டை 23 வது நீதிமன்றம் CC 2214/2019 மற்றும் உயர்நீதிமன்ற CC NO 362 OF 2016 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

எனவே, ‘தாதா’ என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்து வெளியிட திட்டமிட்ட கிஷோர் குமாருக்கு *தாதா* திரைப்படத்தை திரையிட வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய்சேதுபதி உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த ஜான்வி கபூர்…!

விஜய்சேதுபதி உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த ஜான்வி கபூர்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடித்து 2015 ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தை ஜான்வி கபூர் 100 முறை பார்த்துள்ளாராம்.

ஒரு அறிக்கையின்படி, நடிகை கோலிவுட்டில் குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

ஜான்வி கபூர் விஜய்சேதுபதிக்கு போன் செய்ததாகவும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

ஜான்வி கபூர் சமீபத்திய ஊடக உரையாடலில் விஜய் சேதுபதியுடன் தனது உரையாடலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் விரைவில் கோலிவுட்டில் அடியெடுத்து வைப்பதை நாம் பார்க்கலாம்.

Janhvi Kapoor expressed interest in acting with Vijay Sethupathi

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் இவரா?

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் பிக்பாஸின் ஆறாவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளர் இந்த வாரம் வீட்டிற்குள் நுழைவார் என்று தெரிகிறது .

யூடியூப் சேனலின் விஜே பார்வதி வைல்டு கார்டு போட்டியாளராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது .

முதல் சீசனின் போட்டியாளர் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைவார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.

அஜித் சொன்னதை செய்தேன்.. 1 மில்லியன் கிடைச்சிட்டு.; பரவசத்தில் ‘பகாசூரன்’ டைரக்டர் மோகன்

அஜித் சொன்னதை செய்தேன்.. 1 மில்லியன் கிடைச்சிட்டு.; பரவசத்தில் ‘பகாசூரன்’ டைரக்டர் மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் ராம் நடிக்கும் புதுப்பட பூஜை சென்னையில் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்று க்ளாப்போர்டு அடித்து தொடங்கி வைத்தார் இயக்குநர் மோகன்.ஜி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…

“பகாசூரன்’ டிரைலர் 24 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

நான் கதைக்குத்தான் நாயகனைத் தேடுவேன். நாயகனுக்காக கதையை உருவாக்க மாட்டேன்.

இந்தப் படம் சேலத்தில் நடந்த உண்மைக் கதையை தழுவியது. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

ஒரு நல்ல படம் அதுவாகவே விளம்பரமாகிவிடும் என்று சொல்வார் நடிகர் அஜித். அவரின் கருத்தை நான் ஏற்கிறேன்.

அதற்காகத்தான் ‘பகாசூரன்’ பட ட்ரைலருக்கு போஸ்டர் கூட ஒட்ட வில்லை. மேலும் ட்ரெய்லர் விழா கூட இல்லாமல் யூடியூப்பை நம்பியே வெளியிட்டேன்.

தற்போது 1 நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியிருக்கிறது.” என்றார்.

Bakasuran Trailer crossed for one million views in one day

திராவிட மாடலை திணறடிக்க வரும் ‘கிடுகு – சங்கிகளின் கூட்டம்’.; சென்சாரில் 250 கட்.!

திராவிட மாடலை திணறடிக்க வரும் ‘கிடுகு – சங்கிகளின் கூட்டம்’.; சென்சாரில் 250 கட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரமுருகன் இயக்கத்தில் ராமலட்சுமி புரொடக்ஷன் சார்பாக கணேஷ் நாகா தயாரிப்பில், ராஜேஸ்வரி சந்திரசேகர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிடுகு’.

இந்த டைட்டில் அருகே ‘சங்கிகளின் கூட்டம்’ என்ற சப் டைட்டில் கேப்ஷனும் உள்ளது.

இதில், கல்லூரி வினோத், பிர்லா போஸ், கொம்பன் இன்பா, மணிமாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் (கிடுகு) டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் திராவிட மாடலை வெளுத்து வாங்கி இருக்கிறார்கள் என்பதை டீசரை பார்த்தாலே தெரியும்.

இப்பட ஒவ்வொரு வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

ஒரு ஆன்மிகவாதி.. கடவுள் பக்தன்.. திராவிடத்தால் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்கிறார்.? என்பதுதான் கதையின் அடிப்படை.

மேலும் ஹிந்து மதத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு அடக்குமுறை? என்பதைக் சுட்டிக் காட்டுகிறதாம்.

அதில்…. ‘அந்தப் பய ஜாதிய ஒழிக்கிறேன்னு சொல்லி என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான் சார். அப்புறம் மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன்னு சொல்லி நடுரோட்டுல வச்சு தாலிய அறுப்பான்’ என ஒரு பெண் பேசுகிறார்.

மேலும்… “‘இந்திய சுதந்திரத்துக்காக போராடுன, சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை தேவையில்லைன்னு சட்டசபையில சொல்லுதே உங்க திராவிட அரசியல். ஆனா, இந்தியாவுக்கு சுதந்திரம் வேணவே வேணாம்னு சொன்ன ராமசாமிக்கு மட்டும் எதுக்கு சிலை.? போன்ற வசனங்களும் உள்ளது.

விரைவில் ‘கிடுகு’ திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்சாரில் இந்தப் படத்துக்கு 250 கட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இணையத்தில் தெறிக்கும் ‘ரத்தம்’.; காமெடியிலிருந்து விசாரணைக்கு தாவிய சி.எஸ். அமுதன்

இணையத்தில் தெறிக்கும் ‘ரத்தம்’.; காமெடியிலிருந்து விசாரணைக்கு தாவிய சி.எஸ். அமுதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ பட டீசர் பார்வையாளர்களிடையே பல மடங்கு உயர்த்தியுள்ளது.

நகைச்சுவை பாணியில் இருந்து தீவிரமான இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்துக்குள் புகுந்திருக்கும் இயக்குநர் சி.எஸ். அமுதன்.

இதுமட்டுமல்லாது ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார் மற்றும் நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட திறமையான நடிகைகள் மற்றும் மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்தப் படத்தின் எதிர்பார்ப்புகளை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயங்களையே தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசரும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

90 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், வெங்கட்பிரபு மற்றும் பா. இரஞ்சித் ஆகியோர் படத்தின் கதையோட்டத்தை சொல்லியபடி பார்வையாளர்களை இதன் வலுவான காட்சிகளுக்குத் தயார் படுத்துகிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த அனைத்து விஷயங்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

எழுத்து, இயக்கம்: சி.எஸ். அமுதன்,
தயாரிப்பு: கமல் போஹ்ரா, G. தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா- இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்,
இசை: கண்ணன்,
படத்தொகுப்பு: TS சுரேஷ்,
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய தேதி ஆகியவற்றை படக்குழு விரைவில் அறிவிக்கும்.

https://youtu.be/2FqcUyxuFyo

director CS.Amudhan jumps from comedy to investigation.

More Articles
Follows