தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மணி’ என்ற பெயரில் ஒரு திரைப்பட உருவானதாகவும் அந்த படத்தின் முழு காப்பியை கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது அதை ஒரு நபர் திருடி ‘மணி’ என்ற படத்தை ‘தாதா’ என்ற பெயரில் மாற்றி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதை திருட்டு விவகாரம் தான் பெரிதாக பேசப்பட்டது.
தற்போது ஒரு படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் அந்த ஹார்ட் டிஸ்கை திருடி மற்றொரு பெயரில் திரையிட நினைப்பதெல்லாம் என்ன வகையான ——– என்று சொல்ல முடியும்.?
ஓரின தினங்களுக்கு முன் ‘தாதா’ என்ற பெயரில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இந்த படத்தின் நாயகன் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை. இந்தப் படத்தில் நடித்த லொள்ளுசபா மானோகர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் யோகி பாபு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து யோகி பாபு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது… “நான் ‘மணி’ என்ற படத்தில் தான் நடித்தேன். ‘தாதா’ படத்தில் நடிக்கவில்லை.
4 காட்சிகள் மட்டும்தான் படத்தில் வருவேன். என்னை நம்பி யாரும் படத்தை வாங்க வேண்டாம் என்று யோகி பாபு சொன்னதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘மணி’ திரைப்படத்தின் COMPUTER HARD DISK’யினை திருடிய வழக்கு சென்னை சைதாப்பேட்டை 23 வது நீதிமன்றம் CC 2214/2019 மற்றும் உயர்நீதிமன்ற CC NO 362 OF 2016 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
எனவே, ‘தாதா’ என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்து வெளியிட திட்டமிட்ட கிஷோர் குமாருக்கு *தாதா* திரைப்படத்தை திரையிட வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.