தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் , ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘கோப்ரா‘.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கியுள்ள பட குழு இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்.
நடிகை மீனாட்சி பேசும்போது…
விக்ரம் 60 படங்களை கடந்து விட்ட போதும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படமாக நினைத்து முழு உழைப்பையும் கொடுத்து வருகிறார். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்” என்றார்.
நடிகை மிர்ணாளினி பேசும் போது…
விக்ரம் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘சாமி’. அவரை முதல்முறையில் கோப்ரா செட்டில் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை் இது கனவா நினைவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது விக்ரம் வந்து தான் என்னிடம் பேசினார்.
நடிகை ஸ்ரீநிதி பேசும் போது…
‘கோப்ரா’ படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும். இது வித்தியாசமான விருந்தாக இருக்கும்” என்றார்.
அதன் பின்னர் விக்ரம் பேசும் போது…
“திருச்சிக்கு பலமுறை வந்துள்ளேன். இளமை பருவத்தில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்ள இங்கு பலமுறை வந்துள்ளேன்.
‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்
சாமி படத்தின் ஷூட்டிங் இங்குதான் நடைபெற்றது் அது என்னால் மறக்க முடியாது.
‘இமைக்கா நொடிகள்’ , ‘டிமான்டி காலனி’ ஆகிய வித்தியாசமான படங்களை தந்தவர் அஜய் ஞானமுத்து. அவர் இயக்கிய ‘கோப்ரா’ படம் மிகவும் வித்தியாசமான படம் என்று சொல்ல முடியாது.
ஆனால் நிச்சயமாக ஒரு பிரஷ்ஷாக ரசிகர்களுக்கு இருக்கும்.
எந்திரன் ரோபோ படங்களைப் போல சயின்ஸ் பிஃக்ஷன் கலந்து இருக்கும்.
அதுபோல சென்டிமென்ட் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த ஒரு படைப்பாக இருக்கும்” என்று பேசினார் விக்ரம்.
Cobra team at Trichy for movie promotion