‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

7 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரு நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இரவு ‘கோப்ரா’ படக்குழுவினருடன் விக்ரமும் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது விக்ரம் பேசும்போது, ”3 வருடங்களுக்குப் பிறகு என் படம் தியேட்டரில் வெளியாகிறது.

நானும் துருவ்வும் முதல் முறையாக இணைந்த ‘மஹான்’ படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் ரிலீசானது வருத்தம் தான்.

தற்போது ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து என் படங்கள் தியேட்டரில் வெளியாக இருப்பதில் மகிழ்ச்சி.

‘கோப்ரா’ படத்தின் கதை வித்தியாசமானது. கதைக்குத் தேவைப்பட்டதால் நிறைய கெட்டப் போடப்பட்டது. எத்தனை கெட்அப் போட்டேன் என்று எனக்கே நினைவில்லை.

என்னுடைய, 62-வது படத்தில் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து பணிபுரிய உள்ளேன்” என பேசினார் விக்ரம்.

Actor Vikram talks about Cobra and Mahaan

27 வருடங்களாக இருந்த சினிமாவை விட்டு விலகி சன்னியாசியான நடிகை

27 வருடங்களாக இருந்த சினிமாவை விட்டு விலகி சன்னியாசியான நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

49 வயதானவர் நடிகை நுபுர் அலங்கர். இவர் கடந்த 27 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் நடித்த வருகிறார். எனவே பாலிவுட் சினிமாவில் இவர் பிரபலம்.

ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சக்திமான் உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவருடைய கணவர் ஸ்ரீவத்சவாவும் நடிகர் தான்.

இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்த நடிகை.

“எனக்கு ஆன்மீக நாட்டம் எப்போதும் இருந்து வந்தது. இப்போதுதான் முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

தேவையானவர்களுக்கு உதவுகிறேன். நடித்துக் கொண்டிருந்தபோது, புகழ், வெற்றி பற்றி எல்லாம் கவலைப்பட்டேன். இன்று அந்த பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்.

இது என் விருப்பம் இதுதான். இனி என் வாழ்க்கையில் சினிமாவில் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

Nupur Alankar lefts Cinema industry and she took sanyas

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளின் நிறைவேறாத ஆசை.; நிஜத்தில் அரங்கேற்றிய மகள்கள்

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளின் நிறைவேறாத ஆசை.; நிஜத்தில் அரங்கேற்றிய மகள்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில்.. தனக்குத் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டால் தன் தந்தை தனிமையில் இருப்பார். எனவே அவரை கவனித்துக் கொள்ள தன் தந்தைக்குத் துணையாக ஒரு பெண் வேண்டும் என எண்ணி “தந்தைக்கு மணம் முடிக்க பெண் தேடுவார்.

அப்போதுதான் நயன்தாராவை ரஜினிக்கு மணம் முடிக்க யோகி பாபு உடன் இணைந்து திட்டம் போடுவார்.

ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள் ஒரு விபத்தில் இறந்துவிடுவார் நிவேதா தாமஸ்.

இது போன்ற ஒரு சம்பவம் தற்போது ஒருவரின் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.

கணவரை இழந்த தன் தாய்க்கு (59) மறுமணம் செய்து வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த 2 மகள்கள்.

கேரளா திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் கடந்த ஆண்டு உயிர் இழந்தார்.

இவர்களுக்கு ப்ரீத்தி, பிரசீதா என இருமகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தன் தாய்.. அவரின் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்து உணர்ந்துள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப்பின் தன் தாய் ரதிமேனனை மறுமணத்திற்கு சம்மதிக்கவும் வைத்துள்ளனர்.

மனைவியை இழந்து வாழ்ந்து வரும் 63 வயதான திவாகரன் என்பவரை பார்த்து தங்கள் தாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவரும் சம்மதிக்கவே இவர்களின் திருமணத்தை இரண்டு மகள்களும் நடத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே கடந்த 2019ல் விவாகரத்து ஆன தன் தாய்க்கு மறுமணம் செய்து வைத்தார் 23 வயதான கோகுல் ஸ்ரீதர் என்ற ஒரு மகன்.

Darbar movie scene happened in real life at Kerala

செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் கூறிய அட்வைஸ் ஒன்று இன்று வைரலாகி வருகிறது.

அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில்…, ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும்.

காதில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது.

அதீத சத்தம் கேட்பது.. தலையில் காயங்கள் ஏற்படுவது.. காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை. என சில காரணங்களை குறிப்பிட்டு, ‘உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் – நிபந்தனையற்ற அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் இந்த சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar Advises Fans to Take Care of Ears

சூர்யா 42 படத்தை தயாரிக்கும் 2 பிரபல நிறுவனங்கள்.; டைரக்டர் – மியூசிக் – ஹீரோயின் அப்டேட்ஸ்

சூர்யா 42 படத்தை தயாரிக்கும் 2 பிரபல நிறுவனங்கள்.; டைரக்டர் – மியூசிக் – ஹீரோயின் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் சூரியா 42 படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் ஆரம்பமாக உள்ளது.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யகிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்க உள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இவர் இதற்கு முன்பே சூர்யாவின் ஆறு சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் நாயகியாக திஷா பாண்டே பணிபுரிவார் என கூறப்படுகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் அதன் பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கதையை அதிநாராயணன் எழுத வசனங்களை மதன் காக்கி எழுதுகிறார் கலைப் பணிகளை மிலன் கவனிக்க சண்டை பயிற்சியை சுப்ரீம் சுந்தர் கவனிக்கிறார்.

Suriya 42 Shoot Starts Next Week

கமல் அறிமுகப்படுத்திய சுஜாதாவுக்கு ரஜினியுடன் நடிக்க ஆசையாம்

கமல் அறிமுகப்படுத்திய சுஜாதாவுக்கு ரஜினியுடன் நடிக்க ஆசையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் இயக்கிய ‘ விருமாண்டி’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான சுஜாதா அதன்பிறகு வந்த ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் பரவலான அடையாளத்தைப் பெற்று, ‘பருத்தி வீரன்’ சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ் பெற்றார்.

அதற்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து 90-வது படத்தைக் கடந்து 100 -ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் சுஜாதா.

இவர் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.
இப்போது ‘கோலிசோடா 1.5 ‘ மற்றும் பெயரிடப்படாத புதிய ஐந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு அண்மையில் தமிழ்நாடு நவ் என்ற அமைப்பு கோல்டன் கார்பெட் அவார்டு என்ற விருதை அளித்தது. இதற்கான விழாவில் ஜி.வி.பிரகாஷ் , இயக்குநர் சிம்பு தேவன் இணைந்து இந்த விருதை வழங்கினார்கள்.

அதே விழாவில் சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி ‘என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த விருது அனுபவத்தைப் பற்றி சுஜாதா பேசும் போது..

“நான் முதல் முதலில் இயக்குநர் கமல் அவர்களால் ‘விருமாண்டி ‘படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் கதாநாயகி அபிராமிக்கு மதுரை வட்டார வழக்கு சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் என்னை முதலில் கேட்டார்கள். ஒரு நண்பர் அழைத்ததால் கமல் சாரைச் சந்தித்தேன்.

நான் தயங்கிய போது,
அவர் மிகவும் சகஜமாகப் பேசினார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்போது அவர், “நாங்கள் எழுதி வைத்துள்ள வசனங்களை மதுரை வட்டார மொழிக்கு மாற்றி நீங்கள்தான் கதாநாயகிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் “என்று கூறினார்.

நான் பேசிக் காட்டியதைப் பார்த்த பிறகு , நீங்களே ஏன் ஒரு கதாபாத்திரம் செய்யக்கூடாது? என்றவர், செய்யுங்கள் என்றார் . அப்படித்தான் நான் பசுபதிக்கு ஜோடியாக அந்தப் படத்தில் பேச்சியாக நடித்தேன்.

அந்தப் படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. மேலும் பல காட்சிகளில் நான் வந்திருப்பேன் . அப்போது நான் கருவுற்றிருந்தேன் எனவே நடிக்க முடியவில்லை. படம் வெளிவருவதற்கு முன்பு எனக்குக் குழந்தை பிறந்து விட்டது .என் இரண்டாவது குழந்தை பிறந்து 30 நாள் கழித்து தான் ‘விருமாண்டி’ வெளியாகியது.

மீண்டும் கமல் சாரைப் பார்க்கச் சென்றபோது கைக்குழந்தையுடன் சென்றேன்.அப்போது ”என்ன அதற்குள் சின்ன பேச்சியுடன் வந்து விட்டீர்கள் ?” என்றார்.

‘விருமாண்டி ‘க்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘பருத்திவீரன்’ படம் வந்தது.

எனது அறிமுகப் படமாக இயக்குநர் கமல் அவர்கள் வாய்ப்பு வழங்கிய ‘விருமாண்டி’ வந்தது. எனது முகவரியாக ‘பருத்திவீரன்’ படம் அமைந்துவிட்டது .அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்தன.

நான் எதிர்பாராத வகையில் அந்தப் பாத்திரம் அமைந்தது.அதற்கு அமீர் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்தப் படத்தில் நடித்ததற்காகத்தான் முதன் முதலில் எனக்கு விகடன் விருது கிடைத்தது. அதற்கு பின் விஜய் டிவியின் விஜய் விருது ,பிறகு ஃபிலிம்பேர் விருது என கிடைத்தன. அதற்குப் பிறகு ஏராளமான விருதுகள் அந்த பாத்திரத்திற்காகக் கிடைத்தன.

அந்த அளவிற்குப் பருத்தி வீரன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் அறிமுகம் செய்த கமல் சார் அவர்களையும் பெரிய அடையாளம் கொடுத்த அமீர் சார் அவர்களையும் நான் என்றும் மறக்க மாட்டேன்.

அதற்குப் பிறகு நிறைய படங்களில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்தேன். அண்மையில் வெளிவந்த ‘ ஆனந்தம் விளையாடும் வீடு வருவதற்குள் 90 படங்களைக் கடந்து விட்டேன்.

நான் ஒரு படத்தில் நடிக்கும் போது வாய்ப்பு தருபவர்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். நான் என் கதாபாத்திரத்தை ஈடுபாட்டோடு செய்து விடுவேன்.
ஒரே இயக்குநரின் படங்கள் தொடர்ந்து நடிப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படி இயக்குநர்கள் சிறுத்தை சிவா, பாண்டிராஜ், விஜய் மில்டன், சசிகுமார், கரு பழனியப்பன், நந்தா பெரியசாமி என்று எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருகிறார்கள்.

எனது திரையுலக வளர்ச்சியில் சமுத்திரக்கனி அவர்களின் பங்கும் இருக்கிறது என்பேன்.அந்த அளவுக்கு அவர் ஊக்கப்படுத்துவார். உதயநிதி அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், சூர்யா அவர்களின் 2டி நிறுவனங்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகின்றன.

பெரும்பாலும் அனைத்து கதாநாயகர்களில் படங்களிலும் நடித்து விட்டாலும் நான் இன்னும் ரஜினி, தனுஷ் என்ற இருவரின் படங்களில் மட்டும் நடிக்கவில்லை.

எனக்குக் குணச்சித்திரம் மட்டுமல்ல நகைச்சுவை நடிப்பும் நன்றாக வரும். என்னை சிறுத்தை சிவா தான் ‘விஸ்வாசம் ‘ படத்தில் ஸ்டெப் போட்டு நடனமாட வைத்தார்.

இந்த விருது பெறும்போது நான் கடந்து வந்த பாதையைச் சற்றே நினைத்துக் கொண்டேன்.

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘செம’ படத்தில் நடித்திருப்பேன். இது பற்றி அவர் மேடையில் நினைவு கூர்ந்தார்.

சாதாரணமாக காமெடியாக தோன்றும் இவர் நடிப்பு என்று வந்துவிட்டால் சீரியஸாக மாறிவிடுவார் , அர்ப்பணிப்புள்ள ஆர்ட்டிஸ்ட் என்று அவர் என்னைப் பற்றிக் கூறியதை மறக்கமுடியாது.

அந்த விழாவில் எனக்கு மினி ஆச்சி என்று பட்டம் கொடுத்தார்கள் .கோலி சோடாவில் ஆச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததாலோ என்னவோ இப்படி ஒரு பட்டத்தை எனக்குக் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன்.

ஆச்சி மனோரமா அவர்கள் ஒரு பெரிய லெஜெண்ட். அவர் நடிப்பில் ஆயிரம் படங்களைக் கடந்தவர்.

அவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் அந்தப் பாத்திரமாக மாறி விடுபவர். அவர் நடிக்காத பாத்திரங்கள் இல்லை என்கிற அளவிற்கு நடித்தவர்.

அவர் நடித்த பாத்திரங்கள் எல்லாம் ஒரு பாடமாக இருக்கும் .அவரது ரசிகையான எனக்கு இப்படி மினி ஆச்சி என்று பட்டம் கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெருமைப்படுகிறேன்.என்னைப் படங்களில் பார்க்கும் ரசிகர்கள் என்னைத் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்மணியாகத்தான் பார்க்கிறார்கள்.

இதை அவர்கள் என்னிடம் பேசும்போது என்னால் அறிய முடிகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. காலம் ஓடுகிறது.

‘விருமாண்டி’ படம் வந்த போது பிறந்த எனது இளைய மகள் சுபிக்ஷா இப்போது கல்லூரி மாணவி .

நான் மதுரையில் வசிக்கிறேன். வாய்ப்புகள் வரும் போது சென்னை வந்தோ வெளியூர் சென்றோ நடித்துக் கொடுத்துவிட்டு வருகிறேன். மற்றபடி நான் என் அன்பான கணவர், என் அழகான பாசமான மகள்கள் என்கிற சின்ன குடும்பம் என்று வாழ்கிறேன்.

எனக்குக் கோட்டைகள் கட்ட ஆசை இல்லை. சின்ன சின்ன ஆசை கொண்ட எளிய மனுஷியாகவே நான் வாழ்ந்து வருகிறேன்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ‘பருத்திவீரன் சுஜாதா’ என்று பரவலாக அறியப்பட்ட சுஜாதா பாலகிருஷ்ணன்.

Actress Sujatha open talk about Rajini Kamal

More Articles
Follows