ரஜினி நடிக்க மறுத்த சந்திரமுகி 2 படத்தை வாங்கியது லைகா.; டைரக்டர் ஹீரோ அப்டேட்

ரஜினி நடிக்க மறுத்த சந்திரமுகி 2 படத்தை வாங்கியது லைகா.; டைரக்டர் ஹீரோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005ல் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி.

இதில் ரஜினியுடன் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பல பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வாசு பல முயற்சிகளை மேற்கொண்டார். நான் ரெடி ரஜினிகாந்த் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஆனால் ரஜினிகாந்த் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார்

இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார் வாசு.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க சம்மதிக்கவே அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது

இந்த நிலையில் படத்தின் தலைப்பை பெறுவதில் முதல் பாகத்தைத் தயாரித்த சிவாஜி கணேசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் பெற்று உள்ளது.

இதற்காக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் (டைட்டில் மட்டும்) கொடுத்து லைகா விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சந்திரமுகி 2 உருவாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது.

கூடுதல் தகவல்..:

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2

Chandramukhi 2 official announcement is here

சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படும் டி.ராஜேந்தரை சந்தித்தார் கமல்ஹாசன்

சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படும் டி.ராஜேந்தரை சந்தித்தார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே தந்தையின் உடல் நலம் குறித்து அவரின் மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்…

“எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் தன் தந்தை டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்ய அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தையின் சிகிச்சை முடிந்து முழுவதும். குணமான பின்னரே சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது அதுவரையில் பத்த தல படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட ரெடியாகும் இருக்கும் டி ராஜேந்தரை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்.

அப்போது சிம்புவின் தம்பியும் இசை அமைப்பாளருமான குறளரசன் அருகில் இருந்தார்.

Kamal Haasan met T Rajender who is leaving for the US for treatment

சென்னையில் சொந்த வீடு வாங்க போராடும் நடிகர் விமல்

சென்னையில் சொந்த வீடு வாங்க போராடும் நடிகர் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்” படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் ‘மஞ்சள் குடை’ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.

இவர் வால்டர் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களில் நடித்தவர் ஷெரின்.

இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
இசை – ஹரி
வசனம் – கிஸ்ஸார்
எடிட்டிங் – ராஜாமுகமது
ஸ்டன்ட் – ஹரி தினேஷ்
கலை – மாதவன்
இணை இயக்கம் – மாரி செல்வம்.
மக்கள் தொடர்பு- மணவை புவன்
தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகீர் உசேன்.
கதை, திரைக்கதை, இயக்கம் – சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியதாவது….

ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது.

இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார்.

அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது” என்றார் இயக்குனர் சிவம் ராஜாமணி.

Actor vimal struggling to buy his own house in Chennai

உலக இசை தினத்தில் உலகளவில் லிடியன் நாதஸ்வரத்தின் புதிய முயற்சி

உலக இசை தினத்தில் உலகளவில் லிடியன் நாதஸ்வரத்தின் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான ‘குரோமாடிக் கிராமாடிக்’ மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார்.

லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக் கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன.

ஆல்பத்தை பற்றிப் பேசிய லிடியன்…

“உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

“உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி-செவ்வாய் கிழமை அன்று வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும் என்றும் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் கூறினார்.

Lydian Nadhaswaram’s new global attempt

பாராளுமன்றத்தில் ‘சர்தார்’.; சங்கி பாண்டேவுக்காக மட்டும் ரூ 4 கோடி செலவு.!

பாராளுமன்றத்தில் ‘சர்தார்’.; சங்கி பாண்டேவுக்காக மட்டும் ரூ 4 கோடி செலவு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ‘ சர்தார்’. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம்.

சமீபத்தில் இதன் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார்.

இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள்.

சரசரவென வளரும் கார்த்தி – மித்ரன் கூட்டணியின் ‘சர்தார்’

இது வரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டது.

பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் பல இடங்களில் படமானது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படமாக்கப்பட்டது.

இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Artist

Karthi
Rashi khanna
Rajesha vijayan
Chunkey panday
Laila
Yugi Sethu
Munishkanth
Master Rithvik
Avinash
Murali sharma
and others.

Sardar Technicians

Director – P.S. Mithran
Producer – Prince Pictures, S. Lakshman Kumar.
Music composer – G.V. Prakash Kumar
DOP – George C Williams
Editor – Ruben
Art director – Kathir
Stunt direction – Dilip subburayan
Poster designer – Sivakumar (siva digital art)
Executive Producer – Kirubakaran Ramasamy
Production Executive – Paal Pandi
PRO – Johnson

Rupees 4 Crores has been spent just for the shoot of Actor Karthi’s ‘SARDAR’ Villain portions at the Parliament of Azerbaijan.

புஷ்கர் காயத்ரி கூட்டணியில் கதிர் ஐஸ்வர்யா ஷ்ரேயா பார்த்திபன் இணைந்த ‘சுழல்’

புஷ்கர் காயத்ரி கூட்டணியில் கதிர் ஐஸ்வர்யா ஷ்ரேயா பார்த்திபன் இணைந்த ‘சுழல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வோர்டெக்ஸ் தொடரின் உலகளாவிய பிரீமியர் பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே பார்வையாளர்களிடம் அது குறித்த உற்சாகம் அதிகமாக உள்ளது.

நடிகை ஷ்ரேயா ரெட்டி, தீவிர படப்பிடிப்பின் போது, திரையில் போலீஸ் உடை அணிந்து, திரைக்குப் பின்னால் அவர் செய்த வேடிக்கையான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், ஸ்ரேயா, ரெஜினா என்ற போலீஸ்காரராக நடிக்கிறார், ஊட்டி நகரத்தில் ‘தி சுழல் கர்ஜனை’ தீம் டிராக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் செய்த உடல் பயிற்சியை வீடியோவில் காணலாம். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது “This is what Regina does when she’s off duty #suzhalonprime #Suzhal”. என்பதாகும்

https://instagram.com/stories/sriya_reddy/2859643251661875192?utm_source=ig_story_item_share&igshid=YmMyMTA2M2Y=

நடிகையாகவும்,உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் ஷ்ரேயா ரெட்டி, இந்த தீவிரமான க்ரைம்-த்ரில்லரின் படப்பிடிப்பின் போது திரைக்கு பின்னர் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்கிறார்.

“ஒரு தீவிரமான காட்சியை படமாக்கும் போது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. காபி இல்லை, டீ இல்லை, இசை கூட எனக்கு உதவவில்லை. அதனால் குளிர் தாக்கும் ஊட்டியில் மீண்டும் என் கதாபாத்திரத்திற்குள்ளேயே செல்ல நான் முடிவு செய்தேன்.

IIFA Rocks : கதிர் ஐஸ்வர்யா நடித்த ‘சுழல்’ படத்திற்கு கைகொடுத்த அபிஷேக் பச்சன்

இதுதான் ஒரே வழி என்று எனக்கு தோன்றியது. “இந்த வேடிக்கையான வீடியோவில், இன்ஸ்பெக்டர் சக்கரையாக நடிக்கும் சக நடிகர் கதிருடன் ஸ்ரேயாவின் தோழமையை நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் இருவரையும் வலைதொடரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் !

சுழல் – தி வோர்டெக்ஸ்: புலனாய்வு தொடர். பிரம்மா மற்றும் அனுசரண்.M இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரின் எழுத்து மற்றும் தயாரிப்பில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவினர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் போது, கண்டுபிடிக்கப்படும் ஆச்சர்யம் நிறைந்த நிகழ்வுகளை தொகுத்து 8 எபிசோடாக உருவாக்கியுள்ளனர் படகுழுவினர்.

பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தொடரான, சுழல் – தி வோர்டெக்ஸ் என்ற தமிழ் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம், சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபின்னிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய்,உக்ரேனியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்தத் தொடர் சப்டைட்டில்களுடன் கிடைக்கும்.

இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17 முதல் சுழல் – தி வோர்டெக்ஸைப் பார்க்கலாம்.

Kathir and Aishwarya Rajesh for Suzhal

More Articles
Follows