சரசரவென வளரும் கார்த்தி – மித்ரன் கூட்டணியின் ‘சர்தார்’

சரசரவென வளரும் கார்த்தி – மித்ரன் கூட்டணியின் ‘சர்தார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னையை தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.

பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் #சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது.

‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார்.

சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் “சர்தார்” படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ்,
எடிட்டிங் – ரூபன்,
கலை இயக்கம் – கதிர்,

எழுத்து – எம்.ஆர்.பொன். பார்த்திபன், ரோஜி, பிபின்ரகு.

ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்,
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D,
பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன்,
நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி,
ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார்,
விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்S,
நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி,
PRO- ஜான்சன்.

Actor Karthi’s Sardar movie shoot updates

சமூக விரோதிகளை உருவாக்கும் நடிகர்..; அஜித்தே பொறுப்பு என பால்முகவர்கள் புகார்

சமூக விரோதிகளை உருவாக்கும் நடிகர்..; அஜித்தே பொறுப்பு என பால்முகவர்கள் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று பிப்ரவரி 24ல் அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியானது.

இதனை வரவேற்கும் வகையில் பல்வேறு இடங்களில் அஜித்துக்கு கட்அவுட் வைத்து பால் அபிசேகம் செய்தனர் அவரது ரசிகர்கள். ஒரு இடத்தில் அப்பட தயாரிப்பாளர் போனிகபூரின் காருக்கு பால் அபிசேகம் கூட செய்யப்பட்டது.

இந்த நிலையில் பால் முகவர் சங்கத்தின் தலைவர் இதனை கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்…

“நேற்று நீங்கள் (நடிகர் அஜித்) நடித்த வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைய எங்களது சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 2017ஆம் ஆண்டு நீங்கள் நடித்த விவேகம் திரைப்படம் வெளியானபோது.. உங்கள் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும் என உங்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைக்க முயற்சித்தோம்.

ஆனால் முடியவில்லை. தற்போது வலிமை வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீசின்போது உங்களது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது உள்பட பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துகிறது. இதனால் பால் முகவர்கள் சங்கத்தினர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பாலாபிஷேகம் செய்வதற்கு சென்னை (ரோகினி தியேட்டர் அருகே) பல இடங்களில் பால் பாக்கெட்டுக்கள் திருடப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் பால் என நினைத்து தயிர் பார்கெட்டுக்களை திருடியுள்ளனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் ரசிகர்கள் சமூக விரோதிகளாக மாறிவருகின்றனர்.

நீங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டதாக கூறி ஒதுங்கி விடமுடியாது. உங்களது ரசிகர்களின் செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

ஏனெனில் ரசிகர்கள் கொடுக்கும் டிக்கெட் கட்டணம் தான் உங்கள் படத்தின் வியாபாரம் உறுதி செய்யப்படுகிறது. எனவே ரசிகர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்ய வேண்டியது ஒவ்வொரு நடிகரின் கடமை’ என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Milk vendor association condemns ajith fans act during valimai opening

‘வலிமை’ ரிலீசான தியேட்டரில் விஜய் பாட்டுக்கு அஜித் ரசிகர்கள் ஆட்டம்

‘வலிமை’ ரிலீசான தியேட்டரில் விஜய் பாட்டுக்கு அஜித் ரசிகர்கள் ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று பிப்ரவரி 24ல் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

உலகளவில் முதல்நாளில் மட்டும் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி தங்கம் தியேட்டரில் முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

தியேட்டருக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்களை குஷிப்படுத்த அஜித் பட பாடல்களை தியேட்டர் நிர்வாக ஒலிக்க செய்தனர்.

இதனிடையில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலும் ஒலித்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் என்ன செய்வார்களோ? என ஒரு சந்தேகம் இருந்த நிலையில் அந்த பாடலுக்கும் அவர்கள் நடனமாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விஜய் பாடலுக்கு ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் நடனமாடிய வீடியோ இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது..

Ajith fans vibe to Vijay’s song at the ‘Valimai’ release celebrations! – Viral video

சிரஞ்சீவி – விஜய்தேவரகொண்டா படங்களை இயக்கும் ‘புஷ்பா’ இயக்குனர்

சிரஞ்சீவி – விஜய்தேவரகொண்டா படங்களை இயக்கும் ‘புஷ்பா’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ல் டிசம்பர் மாதம் பான் இந்தியா படமாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘புஷ்பா’.

சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பியது. ‘யே.. சாமி… சாமி…’ மற்றும் ‘ஊ.. சொல்றீயா மாமா..’ என்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த பாடல்களாக உள்ளன.

இந்த படம் வெளியாகி 20 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூலித்தது.

முதல் படம் ரிலீசாகும் போது ‘புஷ்பா பார்ட் 2’ பட பணிகளையும் கவனித்து வந்தார் இயக்குனர் சுகுமார்.

எனவே விரைவில் ‘புஷ்பா 2’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் பான்-இந்தியா படத்தை இயக்கவுள்ளாராம். அதில் நாயகனாக சிரஞ்சீவி நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ஒன்றையும் ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் இயக்கவுள்ளதாக தெலுங்கு சினிமாவுலகில் பேசப்படுகிறது.

Pushpa director’s next with Chiranjeevi and Vijay Devarakonda

‘அண்ணாத்த & மாஸ்டர்’ பட வசூலை அலற விட்ட ‘வலிமை’

‘அண்ணாத்த & மாஸ்டர்’ பட வசூலை அலற விட்ட ‘வலிமை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஃஸ் கிங் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

இவரின் படங்களின் வசூல் சாதனைகளை இவரே அடுத்தடுத்த படங்கள் முறியடித்து வருவது வழக்கம்.

இதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரூ 100 கோடி வரை சம்பளம் கொடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

ரஜினி நடித்து கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. கடந்தாண்டு 201ல் நவம்பர் 4ல் தீபாவளி தினத்தன்று வெளியானது. இத்துடன் விஷால் ஆர்யா நடித்த எனிமி திரைப்படமும் ரிலீசானது.

அண்ணாத்த வெளியான நாளன்று முதல்நாளில் மட்டும் ரூ 36 கோடி வசூலித்தாக செய்திகள் வெளியானது.

இதனால் ரஜினி ரசிகர்கள் வசூல் வேட்டையன் என்றுமே தலைவர் ரஜினி தான் என்று கொண்டாடி தீர்த்தனர்.

எனவே விஜய் அஜித் நடித்த படங்கள் ரீலீசாகும்போது அதை ரஜினி பட வசூலுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று அஜித் நடித்த வலிமை திரைப்படம் பெரும் வெளியானது. கிட்டத்தட்ட 2 வருட இடைவெளிக்கு பின்னர் அஜித்தின் படம் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது.

தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் காலை 4 மணிக்கே ‘வலிமை’ திரையிடப்பட்டது. ஒரு டிக்கெட் விலை ரூ 500க்கு குறைவாக கிடைக்கவில்லை. ரூ. 1000 1200 வரையும் விற்கப்பட்டது என்பதே உண்மை.

தமிழகத்தில் மொத்தம் 950 தியேட்டர்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களில் படம் வெளியானதாக கூறப்படுகிறது.

சென்னையில் மட்டுமே ரூ.1.80 கோடி வரை வசூலித்து தமிழகளவில் மொத்தம் ரூ 36 கோடி வரை வசூலித்துள்ளதாம் ‘வலிமை’.

மேலும் ரஜினியின் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ (ரூ. 34 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை ‘வலிமை’ முறியடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் ரஜினி விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அஜித் ரசிகர்கள் செம ஹாப்பியாக உள்ளனர்.

அதே சமயம் ‘வலிமை’ பட வசூலை படத்தயாரிப்பு குழு உறுதிப்படுத்தவில்லை.

2021ல் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்துக்கு போட்டியாக ‘எனிமி’ படமும் பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படத்துக்கு போட்டியாக சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது.

ஆனால் ‘வலிமை’ படத்துக்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை. மேலும் ‘வலிமை’ படம் விசேஷ நாளில் வெளியாகவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

AjithKumar’s #Valimai takes All-Time No.1 Day 1 Opening in Tamil Nadu

நீ திறமைசாலி.. உன்னை சீக்கிரம் மீட் பண்றேன் கண்ணா..; ரசிகரிடம் உறுதியளித்த ரஜினி

நீ திறமைசாலி.. உன்னை சீக்கிரம் மீட் பண்றேன் கண்ணா..; ரசிகரிடம் உறுதியளித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்த (களிமண்) மண்பாண்ட தொழில் செய்து வருபவர் ரஞ்சித்.

இவரை ரஜினி ரஞ்சித் என்று சொன்னால்தான் அந்த பகுதி மக்களுக்கே இவரை தெரிகிறது.

இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தன் பெயரை ரஜினி ரஞ்சித் என வைத்துக் கொண்டார். இவரை பார்த்தாலே இவர் ரஜினி ரசிகர்தான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

நெற்றியில் விபூதி பட்டை… கழுத்தில் ருத்திராட்ச மாலை, ரஜினி ஸ்டைலில் உடைகள், தலைவரின் 80s சிகை அலங்காரம் என அச்சு அசலாக ரஜினியாகவே வலம் வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த ரஜினி ரஞ்சித் சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களை வரைவது வழக்கமாக கொண்டவர்.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.

அந்த மண்பாண்டத் தொழிலில் ரஜினியின் உருவ சிலையை வடிவமைத்து ரஜினி அவர்களுக்கு அனுப்பி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் படையப்பா சிலையை வடிவமைத்து அதை ரஜினியிடமே நேரில் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி சிலையை பரிசளிக்க ரஜினியின் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.

இதனையறிந்த ரஜினி அவருக்கு ஓர் வாய்ஸ் மெசேஜ்ஜை தன் உதவியாளர் மூலம் அனுப்பி இருக்கிறார்.

அதில்… “சீக்கிரமே உன்னை சந்திக்கிறேன் கண்ணா நீ மிகப் பெரிய திறமைசாலி. நீ நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைவர் புரிஞ்சிக்கவே மாட்டாரா.? கலங்கிய ரசிகரால் அதிர்ந்த ரஜினி. l Fan request to Thalaivar Rajini

Rajinikanth promised to meet his diehard fan

More Articles
Follows