விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டர் அப்டேட்ஸ்

விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bobby Simha character updates from Vikrams Saamy Squareஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக், மனோரமா, ரமேஷ் கண்ணா, உள்ளிட்டோர் நடித்த சாமி படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தையும் ஹரி இயக்க விக்ரம் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு சாமி2 என பெயரிடாமல் சாமி ஸ்கொயர் என பெயரிட்டுள்ளனர்.

த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நாயகிகளாக நடித்து வந்தனர்.

ஆனால் இந்த 2ஆம் பாகத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு தன் கேரக்டர் வலுவில்லை என தெரிவித்து விலகினார்.

இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.

இவரின் கேரக்டர் குறித்த தகவல்கள்கள் வெளிவந்துள்ளன.

முதல் பாகத்தில் கோட்டா சீனிவாச ராவ் (பெருமாள் பிச்சை) கேரக்டர் இருந்தது. தற்போது அவரின் மகனாக ராவண பிச்சை என்பவராக பாபி சிம்ஹா நடிக்கிறார்.

தற்போது அந்த படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Bobby Simha character updates from Vikrams Saamy Square

ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பற்றி கலைஞானம்-மகேந்திரன்

ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பற்றி கலைஞானம்-மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans meet photos (5)ஓரிரு தினங்களுக்கு முன் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது என பல்வேறு தரப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை குறை கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

தன்னுடைய அரசியல் அறிவிப்பை இந்த சந்திப்பில் அவர் வெளியிடுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதில் ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம் (இவர்தான் ரஜினியை பைரவி படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர்) மற்றும் இயக்குனர் மகேந்திரன் இருவரும் கலந்துக் கொண்டனர்.

அவர்கள் பேசியதாவது…

“ரஜினிகாந்த் வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார். அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர். அவ்வளவு நல்ல மனிதர்.

அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது” என்று வாழ்த்திப் பேசினார் கலைஞானம்.

இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது..

“சோ ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னது… யாருக்கும் இல்லாத ஈர்ப்பு ரஜினியிடம் இருக்கு. யாருக்கும் துன்பம் தரும்படி ரஜினி நடந்துகொள்ள மாட்டார்.

ஒரு நல்ல தலைவருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் ரஜினியிடம் உள்ளது என அடிக்கடி மறைந்த சோ என்னிடம் சொல்வார்.

தமிழ்நாட்டுக்கு தற்போது தலைமை என்று யாராவது இருக்கிறார்களா?

சில பேர் பேருக்கு எளிமையாக இருப்பார்கள். உண்மையான எளிமையானவர் ரஜினிகாந்த்.

எதிலும் நிதானமாக இருப்பவர்களால்தான் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும். அந்த நிதானம் ரஜினியிடம் அதிகமுண்டு” என்றார்.

பைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு

பைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sangu chakkaramமாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சங்கு சக்கரம்.

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், மலேசியா ஆர்.ஜே. நடிகை கீதா மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தயாரிப்பாளர் பேசினார். அப்போது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களால் நஷ்டம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் படம் ரிலீஸ் ஆகி 1 மாதம் கழித்து இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிட அவர் வேண்டுக்கோள் விடுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதனை அங்குள்ள சங்கு சக்கரம் படக்குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் விளைவாக அதில் உள்ள ஒரு குழந்தை, தன் பெற்றோர் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்துள்ளார்.

குழந்தையின் முடிவால் மனம் மாறிய பெற்றோர் இனி கம்ப்யூட்டரில் படம் பார்ப்பதில்லை. தியேட்டரில் மட்டும்தான் படம் பார்ப்பேன்” என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நெகட்டிவ் மீம்ஸ்-செய்திகள் மனநிலையை பாதிக்கும்; ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்

நெகட்டிவ் மீம்ஸ்-செய்திகள் மனநிலையை பாதிக்கும்; ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த். தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை இன்று சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்.

இன்று டிசம்பர் 26 ஆம் தொடங்கிய இச்சந்திப்பு 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

முதல் நாளான இன்று சூப்பர் ஸ்டாருடன் அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.

விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது…

” மே மாதம் நடந்த சந்திப்புக்கு பின் காலா படத்தின் சூட்டிங்க், மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்பொழுது தான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது.

என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகுகாலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை.

இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர், அதற்கு மிக வருத்தப்பட்டேன், மன்னிக்கவும்.

ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை மகளை வெட்டினார். மகன் தாயை வெட்டினார். கற்பழிப்பு இப்படி நிறைய நெகட்டிவ்வான செய்திகள் நாள்தோறும் வருகிறது.

மேலும் நெகட்டிவ்வான மீம்ஸ் வருகிறது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும். பாசிட்டிவ்வான விஷயங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார் ரஜினிகாந்த்.

முன்னதாக ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி வியூகம் அமைப்பதற்குள் போர் முடிந்துவிடும்… : எஸ்வி சேகர்

ரஜினி வியூகம் அமைப்பதற்குள் போர் முடிந்துவிடும்… : எஸ்வி சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sve shekarசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் ரசிகர்களை 2வது கட்டமாக இன்று சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் பேசும்போது…

எனக்கு அரசியல் தெரியும். எனவேதான் அரசியலுக்கு வர தயங்குகிறேன்.

யுத்தம் களத்திற்கு வரும்போது வீரம் மட்டும் முக்கியமில்லை. வியூகம் முக்கியம். என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து நடிகரும் அரசியல் பிரமுகரும் ரஜினியின் நண்பருமான எஸ்வி. சேகர் கூறியதாவது…

நான் ரஜினியின் நண்பர்தான். அவர் 45 வயதில் எடுக்க வேண்டிய அரசியல் முடிவை 68 வயதில் எடுக்கிறார்.

அப்படி ஒருவேளை அவர் எடுத்து அதை ஜெயித்துவிட்டால் நிச்சயம் அவருக்கு ஆண்டவன் அருள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வியூகம் அமைக்க வேண்டும் என்கிறார். போர் வருவதற்கு முன்பு வியூகம் அமைக்கலாம்.

போர் வந்துவிட்ட பிறகு வியூகம் அமைக்கிறேன் என்றால் போரை தள்ளி வைக்க முடியாது. அதற்குள் போர் முடிந்துவிடும்” என்றார்.

S Ve Shekar talks about Rajinis speech in Fans meeting

டிசம்பர் 31ல் அரசியல் குறித்த என் முடிவை தெரிவிப்பேன்: ரஜினி

டிசம்பர் 31ல் அரசியல் குறித்த என் முடிவை தெரிவிப்பேன்: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stage speechரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 20 வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் ரஜினிகாந்த் அடிக்கடி அரசியல் குறித்து பேசி வருவதால் அரசியல் பிரபலங்களும் அவரின் அரசியல் குறித்த முடிவை அறிய ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தல் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி.

அப்போது அவர் பேசியதாவது….

எனது அரசியல் பிரவேசம் பற்றி அறிய மக்களை விட ஊடகங்கள்தான் அதிக ஆர்வத்தில் உள்ளனர்.

எனக்கு அரசியல் புதிது அல்ல. 1996 முதலே அரசியலில் உள்ளேன்.

(1996ஆம் ஆண்டுதான் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து ரஜினி வாய்ஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

என் அரசியல் நிலைப்பாட்டை வருகிற டிசம்பர் 31ஆம் அறிவிக்கிறேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை. அது என்ன என்பதை அன்று அறிவிப்பேன்.” என்று பேசினார்.

On Dec 31st 2017 i will announce my political stands says Rajinikanth

More Articles
Follows