தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிகில் பட வசூலில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம், ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் விஜய் வீட்டில் எந்த ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றவில்லை.
வாக்கு மூலங்கள் மட்டுமே பெறப்பட்டன.
பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்
இரண்டு நாட்கள் விசாரணைக்கு பிறகு அதிகாரிகளின் விசாரணையில் இருந்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் நெய்வேலிக்கு சென்றார் விஜய்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தபோது, பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தது யார்? உடனே அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கத்தில் அங்கு கூடிய பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.