தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா துறையினரே கதிகலங்கும் அளவுக்கு பல பிரச்சினைகளை முறியடித்து விஜய் நடித்த மெர்சல் படம் நேற்று வெளியானது.
அப்பாடா? ஒருவழியாக பிரச்சினை ஓய்ந்தது என்று படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் மெர்சல் பட பிரச்சினைகளை தீர்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரில் நன்றி தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.
இந்நிலையில், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்…
‘எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்’ என்று கிழிந்த பர்சை வடிவேலு ஒரு காட்சியில் காட்டுவார்.
மற்றொரு காட்சியில் ஒருவர் புதிய 500 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக கொண்டுவந்து ஒரு உண்டியலில் போடுவார்.
இப்போ இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா’ என்று மத்திய அரசை கிண்டல் செய்வது போல ஒரு காட்சியிருக்கும்.
மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியாக நம் நாட்டு நடப்புகளை ஆணித்தரமாக பேசியிருப்பார் விஜய்.
சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்று கூறியிருப்பார்.
தற்போது இந்த க்ளைமாக்ஸ் காட்சி பன்ச் டயலாக்குகள்தான் பெறும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் வழக்கு தொடுக்க போவதாக கூறியுள்ளார் தமிழிசை.
மேலும் அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பிவருவதாகவும் தமிழிசை ஆரூடம் தெரிவித்துள்ளார்.
BJP Chief Tamilisai Saundrajan slam Vijay for criticizing GST in Mersal