தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் கலாபவன் மணி. இவர் ஜெமினி, ஜேஜே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. எனவே சிபிஐ இவரின் மரணம் குறித்து விசாரித்து வந்தது.
இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.
அதில் கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல. அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் அவர் மரணம் அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.