கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோர்ட் உத்தரவு

கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court Orders CBI Probe into Kalabhavan Mani Death issueமலையாள சினிமாவை சேர்ந்த கலாபவன் பணி 200-க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மார்ச் 6-ம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. எனவே கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், அவர் குடித்த மதுவில் குளோரோபைரிபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கலாபவன் மணியின் உறவினர்கள் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினர்.

ஆனால் அப்போது இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதை ஏற்காமல், மாநில போலீசாரே தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவி்த்தது.

இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள, பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு, கலாபவன் மணியின் உறவினர்களின் கோரிக்கையை ஏற்றது.

இதனையடுத்து, கலாபவன் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை செய்யவே, சிபிஐ விசாரிக்க கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

High Court Orders CBI Probe into Kalabhavan Mani Death issue

அஜித் பட இயக்குநருடன் இணைவாரா ரஜினிகாந்த்.?

அஜித் பட இயக்குநருடன் இணைவாரா ரஜினிகாந்த்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith-Siruthai-Sivaசிறுத்தை என்ற வெற்றிப் படத்தை கொடுத்த போது சிறுத்தை சிவா என அழைக்கப்பட்டார்.

அதன்பின்னர் அஜித் நடித்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார்.

தற்போது விவேகம் படத்தை இயக்கி, அஜித் படங்களின் இயக்குனர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர், ரஜினிக்காக ஒரு மாஸான கதை ஒன்றை தயாராக வைத்திருக்கிறாம்.

விரைவில் ரஜினியை சந்தித்து கதை சொல்லவும் தயாராகி வருகிறாராம்

சிவா கதைக்கு ரஜினிகாந்த் ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Will Rajinikanth act in Ajith movies director Siva

சிவகார்த்திகேயனின் கெட்டப்பை மாற்றியவருடன் இணையும் தனுஷ்.?

சிவகார்த்திகேயனின் கெட்டப்பை மாற்றியவருடன் இணையும் தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maankarate director thirukumaranமெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தபோது, ஒரே மாதிரியான கெட்டப்பிலேயே நடித்தார்.

இவர் முதன்முறையாக ஹன்சிகாவுடன் இணைந்த மான்கராத்தே படத்தில் கொஞ்சம் கெட்டப்பை மாற்றி நடித்தார்.

இப்படத்தை இயக்கியவர் திருக்குமரன்.

இதனையடுத்து, உதயநிதி நடித்த கெத்து படத்தை இயக்கினார்.

இந்நிலையில் இவர் தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய அறிவிப்பு பவர் பாண்டி ரிலீஸின்போது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush may teams up with Maan Karate Thirukumaran

சிவகார்த்திகேயனை அடுத்து, நிவின் பாலியுடன் நயன்தாரா

சிவகார்த்திகேயனை அடுத்து, நிவின் பாலியுடன் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhyan-sreenivasanமலையாள சினிமாவில் அறிமுகமாகி, இன்று தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா.

கமல் தவிர தமிழில் உள்ள பிரபல நட்சத்திரங்களுடன் டூயட் பாடிவிட்டார் இவர்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாள இயக்குநரான வினித் ஸ்ரீனிவாசனின் தம்பியும் நடிகருமான த்யன் ஸ்ரீனிவாசன் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறாராம்.

அந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம்.

மேலும் நயன்தாராவுக்கு முக்கியவத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly and Nayanthara as the leads in Dhyan Sreenivasans directorial debut

‘அஞ்சான் பிரச்சினை பைரவாவுக்கு வரக்கூடாது…’ விஜய் ரசிகர்கள் திட்டம்

‘அஞ்சான் பிரச்சினை பைரவாவுக்கு வரக்கூடாது…’ விஜய் ரசிகர்கள் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriyaபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.

படம் வந்து 100 நாட்களை கூட கடக்கவில்லை.

இந்நிலையில் வருகிற தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிரபல டிவியில் ஒளிப்பரப்ப உள்ளனர்.

இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன், சூர்யா நடித்த அஞ்சான் படத்தையும் சில நாட்களில் டிவி ஒளிப்பரப்ப திட்டமிட்டனர்.

ஆனால் சூர்யா ரசிகர்கள் கடுமையாக எதிர்த்த பின்னர் அந்த சமயம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay fans request to TV Channel that Bairavaa should not be telecast on Tamil New Year day

‘சுட்டெரிக்கும் சூரியன்; சூட்டிங்..’ வடசென்னை பற்றி தனுஷ் தகவல்

‘சுட்டெரிக்கும் சூரியன்; சூட்டிங்..’ வடசென்னை பற்றி தனுஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vetri maaran Dhanushதனுஷ் தயாரித்து பாடல் எழுதி, பாடி, இயக்கி நடித்துள்ள படம் பவர் பாண்டி.

இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் வடசென்னை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வடசென்னை படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது.

சுட்டெரிக்கும் சூரியன், கடல், பெரிய மனிதர்கள் அப்புறம் வெற்றிமாறனுக்கே உரிய சூட்டிங் தளங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ், சமந்தா, அமலாபால், விஜய் சேதுபதி உள்ளிட்டவர் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Dhanush‏Verified account @dhanushkraja
With power paandi’s release 2 days to go,resuming vada chennai shoot 4m today.Blazing sun,sea,great people nd typical Vetrimaaran locations

Dhanush tweeted Vada Chennai Shooting again started

More Articles
Follows