தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா நடித்த ‘கருப்பன்’ படம் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி கலந்துக் கொண்டு பேசியதாவது:
முன்பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும்போது வரும் அன்புதான் வாழ்க்கையின் ஆதாரம். அதை இப்படத்தில் அழகாக சொல்லியிருக்கிறோம்.
என் மனைவியாக தன்யா அழகாக நடித்திருக்கிறார்.
‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸ் ஆகும்போது மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற டென்ஷன் இருந்தது.
இது நம் மண் சார்ந்த மக்கள் வாழ்வியலை பற்றிய படம்.
யதார்த்தமான படங்களை விட கமர்ஷியல் படங்களில் நடிப்பது சிரமம்.
10 பேரை அடிக்கும் போது வரும் ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும். அது ரொம்ப கஷ்டம்.
விஜய்சேதுபதி என்பவன் ஒரு சாதாரணமான ஆள். அவனுக்கும் மசாலா படம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவன் அடித்தாலும் 10 பேர் பறந்து விழவேண்டும் என்ற ஆசையுள்ளது.
பல படங்களில் கெஸ்ட் ரோல் வரும்போது தவிர்த்துவிடுகிறேன். ஆனால் அதையும் மீறி அவர்கள் அன்பாக கேட்கும்போது வேறுவழியில்லாமல் நடித்துக் கொடுக்கிறேன்.
தியாகராஜன் குமாரராஜா மாதிரியான இயக்குநரோடு படம் பண்ணுவது சந்தோஷமாக உள்ளது. அது திருநங்கை வேடமா? அல்லது பெண் வேடமா? என்பதை பற்றி இப்போது சொல்ல முடியாது.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
I am ordinary person says Vijay Sethupathi at Karuppan press meet