தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
18.5.2009’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக தன்யா ரபியா பானு நடித்து வருகிறார்.
இப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மர்ம நபர் நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார்.
இதுதொடர்பாக, நடிகை தன்யா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தன்யா கூறியதாவது…
நான் இயக்குனர் கணேசன் இயக்கிய 18.5.2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இலங்கையில் இசைபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டது.
ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இந்தநிலையில் என்னிடம் செல்போனில் பேசிய நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்தார்.
18.5.2009 படத்தில் நிர்வாணமாக, கேவலமாக நடித்து உள்ளாய். உன்னை தொலைத்து விடுவேன் என்று பயமுறுத்தினார்.
நானும், எனது தாயாரும் தனியாக வசிக்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.