மெர்சல் பட 3 நாயகிகளில் பவர்புல் யார்.? அட்லியே ஓபன் டாக்

மெர்சல் பட 3 நாயகிகளில் பவர்புல் யார்.? அட்லியே ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlee talks about Mersal heroinesராஜா ராணி மற்றும் தெறி படங்களை இயக்கியவர் அட்லி.

முதல் படத்தில் நயன்தாரா, நஸ்ரியாவும், தெறி படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள் இருந்தனர்.

தற்போது இயக்கியுள்ள மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என 3 நாயகிகள் உள்ளனர்.

இதில் யாருடைய கேரக்டர் பவர்புல்லாக இருக்கும் என அட்லி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாட்டுக்காக வந்து போகும் கேரக்டர்களில் 3 நாயகிகளும் நடிக்கவில்லை.

ஆனால் நித்யா கேரக்டர் முக்கியத்துவம் பெறும். அது அவருக்கு பொருந்திவிட்டது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Atlee talks about Mersal heroines

விக்ரம்-தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

விக்ரம்-தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajeshசின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்துக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

தற்போது முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் உடனும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் தனுஷ் உடனும் நடித்து வருகிறார்.

இந்த இரு நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது…

“எனக்கு வந்த பெரிய படங்களில் முதல்படம் துருவநட்சத்திரம்தான்.

இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ராதிகா மேடம், இன்னொரு ஹீரோயின் ரீது என அனைத்து கேரக்டர்களுமே படத்தில் முக்கியமாக இருக்கும்.

ஒரு காட்சியில் மூன்று பக்க வசனம் பேசி எமோஷனலாக நடிக்க வேண்டும்.

பெரிய டைரக்டர், பெரிய நடிகர் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. பின்னர் இரண்டு டேக்கிலேயே ஓகே பண்ணிவிட்டேன்.

‘சூப்பரா பண்ணீங்க ஐஸ்வர்யா’ என்று விக்ரம் சார் பாராட்டினார்.

வேறு எந்த ஹீரோஸ் இப்படி பாராட்வார் என தெரியாது. அவருடைய பாராட்டு மறக்க முடியாது.

அதுபோல் தனுஷ் உடன் வடசென்னை படத்தில் நடித்து வருகிறேன்.

என் கேரக்டரில் முதலில் சமந்தா நடிக்கவிருந்தார். அதன்பின்னர் அமலாபால் வந்தார். இப்போது நான் நடிக்கிறேன்.

என் கேரக்டர் படு லோக்கலாக இருக்கும். இதற்குமுன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் வந்திருக்குமா? தெரியாது.

வடசென்னை படம் எனக்கு முக்கியமான படமாக அமையும்.” என்றார்.

Aishwarya Rajesh shares her working experience with Vikram and Dhanush

இனி வருடத்திற்கு 2 படம்; சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்.?

இனி வருடத்திற்கு 2 படம்; சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

From 2018 I will try to give 2 movies per year says Sivakarthikeyanதீபாவளி திருநாளையொட்டி வாழ்த்து சொல்ல பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

அந்த சந்திப்பில் அவர் பேசும்போது…

ரெமோ படத்திற்கு பிறகு சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வருடத்திற்கு ஏன் ஒரு படங்களை மட்டும் கொடுக்கிறீர்கள்? என ரசிகர்களும் எல்லாரும் கேட்கிறார்கள்.

இனி 2018 ஆண்டு முதல் வருடத்திற்கு நிச்சயம் 2 படங்களை கொடுப்பேன்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகளை பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க சொல்லுங்கள்.” என்று பேசினார்.

From 2018 I will try to give 2 movies per year says Sivakarthikeyan

விஜய் பட புக்கிங்கை பார்த்து மெர்சலான விஷால்.? ரிலீஸ் தடை நீக்கம்

விஜய் பட புக்கிங்கை பார்த்து மெர்சலான விஷால்.? ரிலீஸ் தடை நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vishalசினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசால் கேளிக்கை வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்நிலையில் இன்று முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது…

* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்க வேண்டாம்.

* அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்

* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு

* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.

குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

* தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் இருந்தாலும், மெர்சல் படத்திற்கு டிக்கெட்டுகள் முன் பதிவுகள் முன்பே தொடங்கிவிட்டது.

இன்று முதல்வரை சந்திக்கும் முன்பு சில விதிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவித்து இருந்தார் விஷால் என்பதை பார்த்தோம்.

இதற்கு பின்னணியில் மெர்சல் உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆப் டவுன்லோட் செஞ்சு ஆப்பு வச்சிக்காதீங்க. ; எச்சரிக்கும் X வீடியோஸ்

ஆப் டவுன்லோட் செஞ்சு ஆப்பு வச்சிக்காதீங்க. ; எச்சரிக்கும் X வீடியோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Film X Videos press meet photos (5)ஸ்பீடு டைரக்டர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர் சஜோ சுந்தர்.

மேலும் பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

தற்போது இவர் ‘X வீடியோஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இப்படம் குறித்து பேசினர்.

அப்போது இயக்குனர் சஜோ சுந்தர் பேசியதாவது…

“என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.
ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.

இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம்.

அதை சமூக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.

என் பையன் கூட, “எங்க அப்பா டைரக்டர். . இப்படி X வீடியோஸ் என்ற படம் எடுத்திருக்கிறார் என்று தன்னுடைய பிரண்ட்ஸிடம் கூட சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டான்.

ஏன் இந்த டைட்டிலை வைத்தீர்கள். ? எப்படி நாங்கள் இதை வெளியில் சொல்வது என என என் நண்பர்கள், படத்தில் வேலை பார்த்தவர்கள் பலரும் கேட்டார்கள்.

நிச்சயம் நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும். இது இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக எடுக்கப்பட்ட படம். குறிப்பாக கல்லூரி பெண்களை, குடும்ப பெண்களை இணையதள ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது.

சரி இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏன் ஏற்பட்டது.? மொபைலில் ஆபாசப்படங்களை ரெகுலராக பார்க்கும் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார்.

அவரது மனைவியின் படமே ஒருநாள் இதுபோன்ற இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ந்தேன். . அவருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குள் வந்தது?

யாரால் படம்பிடிக்கப்பட்டது என்கிற ஆராய்ச்சியில் இறங்கியபோது பல அதிர்ச்சி கலந்த உண்மைகள் தெரியவந்தது.

நாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக சில ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்கிறோமே.? எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான். . அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்.? விஷயம் இருக்கிறது.

நாம் டவுன்லோடு செய்யும் பல ஆப்ஸ்’கள் இந்தக் ஆபாச இணையதளங்களுடன் கூட்டணியில் இருப்பவை தான். அதனால் அந்த ஆப்ஸ்’களை டவுன்லோடு செய்துவிட்டால் நம் மொபைலில் உள்ள நமது அந்தரங்க வீடியோக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை கண்டுபிடித்து இந்த ஆபாச இணையதளங்களுக்கு அவை அனுப்பி விடுகின்றன.

இதற்காக அந்த ஆபாச இணையதளங்கள் இந்த ‘ஆப்ஸ்’களுக்கு பணம் கொடுக்கின்றன. இன்றைய இணையதள உலகமே முக்கால்வாசி இந்த ஆபாச இணையதளங்கள் கொடுக்கும் பணத்தில் தான் இயங்கி வருகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி கலந்த உண்மை.

அவ்வளவு ஏன். . எங்கேயோ இருந்துகொண்டு உங்கள் மொபைலின் கேமராவை ஆபரேட் பண்ணும் அளவுக்கு டெக்னிகலாக இந்த கும்பல் வளர்ந்துவிட்டார்கள்.

தயவுசெய்து செல்போனை உங்க பெட்ரூமில் வைக்காதீர்கள். பாத்ரூமிற்குள் கொண்டுபோகாதீர்கள். நெருங்கியவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோவாக எடுக்காதீர்கள்.

இந்த ஆபாச வீடியோக்களுக்கு பிறப்பு மட்டும் தான் உண்டு. இறப்பு என்பதே இல்லை. அதனால் இந்த ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடைசெய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தப்படத்தை எடுத்துள்ளேன்.

விரைவில் இந்த ஆபாச இணையதளங்களை தடை செய்யச்சொல்லி வழக்கு தொடுக்கவும் இருக்கிறேன்.
இந்த ஆபாச இணையதளங்கள் பற்றிய உண்மையை தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.

தெரியாத அப்பாவி ஜனங்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு இந்த ஆபத்தை பற்றி கொண்டுசெல்வதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளேன். ” என்று பேசினார்.

Your mobile Apps may be create problems for you Says X Videos director Sajo Sundar

Tamil Film X Videos press meet photos

சந்தானத்திற்கு முன்ஜாமீன்; போலீஸ் ஸ்டேஷனில் 2 வாரம் கையெழுத்து போட உத்தரவு

சந்தானத்திற்கு முன்ஜாமீன்; போலீஸ் ஸ்டேஷனில் 2 வாரம் கையெழுத்து போட உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamநடிகர் சந்தானத்திற்கும் பில்ட்டிங் கான்ட்ராக்டர் சண்முக சுந்தரத்துக்கும் பண பிரச்சினை இருந்து வந்தது.

தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரம் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தால் அவரையும் அவருடன் இருந்த அவரது நண்பர் வக்கீல் பிரேம் ஆனந்த்தையும் சந்தானம் தாக்கினார்.

எனவே அவர்கள் புகார் அளிக்க, வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தானத்தை தேடிவந்தனர்.

எனவே தலைமறைவான சந்தானம், வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று விசாரணைக்கு வந்தபோது, இன்று விசாரணைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

அதன்படி இன்று விசாரணைக்கு வந்த போது சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்கியது கோர்ட்.

மேலும் 2 வாரங்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சந்தானம் வந்து கையெழுத்து போட உத்தரவிட்டுள்ளது.

More Articles
Follows