ஷாருக்குடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

ஷாருக்குடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

தற்போது ஷாருக்கான் உடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.

இதில் ஷாருக், அட்லி, விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் நாயகியாக நடித்திருந்த நயன்தாரா பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி ஷாருக்கான் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் .

அவர்கள் திருப்பதி கோயிலில் சென்று வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Sharukh Nayanthara Vickky thirupathi temple visit

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்ட்டாகிராம் என்ற சமூக வலைதள பக்கத்தில் இணைந்தார் நடிகை நயன்தாரா.

அவர் இணைந்தது முதல் அவரது ரசிகர்கள் பலரும் அவரைப் பின் தொடர்ந்தனர். இந்த அக்கௌண்டில் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் இதோ வந்துட்டேன்னு சொல்லு என்ற ரஜினியின் கபாலி பட டயலாக்கையும் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் ட்ரெய்லரை பகிர்ந்தார் நயன்தாரா. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3 தேதி வெளியான ‘இறைவன்’ பட ட்ரைலரை நயன்தாரா பகிரவில்லை.

‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகி நயன்தாரா தான்.

ஷாருக்கான் பட டிரைலரை பகிர்ந்த நயன்தாரா ஜெயம்ரவி பட ட்ரைலரை மட்டும் பகிராதது ஏன் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Nayanthara support Hindi Actors not Tamil actors

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட சூட்டிங் அப்டேட்

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’.

இதில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தீயவர் குலைகள் நடுங்க

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

தீயவர் குலைகள் நடுங்க

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.‌

தீயவர் குலைகள் நடுங்க

First time Arjun and Ishwarya Rajesh join hands together

31 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தை பாரதிராஜாவை இளையராஜாவுடன் இணைத்த மனோஜ்

31 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தை பாரதிராஜாவை இளையராஜாவுடன் இணைத்த மனோஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும்.

தற்போது ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா - இளையராஜா

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு மனோஜ் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குந‌ராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது, அதனையொட்டி அவரை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.

அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று மனோஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

பாரதிராஜா - இளையராஜா

Bharathiraja and Ilaiyaraaja reunite after 31 years

முத்தையா முரளிதரன் பட பயோபிக் பட டிரைலரை வெளியிடும் சச்சின் டெண்டுல்கர்

முத்தையா முரளிதரன் பட பயோபிக் பட டிரைலரை வெளியிடும் சச்சின் டெண்டுல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ‘800’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

அதன்பிறகு, இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் முதல் தொற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘800’ படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் இப்போது முத்தையா முரளிதரனாகவும், மனைவி மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை இன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிட உள்ளார்.

அதன் படி, மும்பையில் இன்று மதியம் 2.45க்கு ‘800′ படத்தின் ட்ரெய்லரை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

Sachin Tendulkar to unveil Trailer for Muttiah Muralitharan’s Biopic ‘800’ Movie

அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் தனுஷ்.; மீண்டும் கொடி பறக்குமா.?

அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் தனுஷ்.; மீண்டும் கொடி பறக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முடித்துவிட்டார்.

இந்த படத்தை அடுத்து, தனது 50 படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் . தலைப்பிடப்படாத இப்படம் ‘D 51’ என அழைக்கப்படுகிறது.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா நடிக்கிறார் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ‘D 51’ படம் பொலிட்டிக்கல் த்ரில்லர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.

இதில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கு முன்னதாக அவர் ‘கொடி’ படத்தில் அரசியல் பிரமுகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush to play a politician role again in shekhar kammula directorial d51

More Articles
Follows