தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி அவர்கள் ராஜா ராணி என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.
இப்படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்று சிலர் கூறினர்.
இதனையடுத்து விஜய் நடித்த தெறி படத்தை எடுத்தார். இப்படமும் சத்ரியன் படத்தின் காப்பி என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது.
தற்போது மெர்சல் படத்தை உருவாக்கியுள்ளார். இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன் கருத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் அட்லி.
அவர் கூறியதாவது… ‘இசையில் 7 ஸ்வரங்கள்தான் இருக்கிறது.
அதற்குள்தான் மெட்டமைக்க முடியும்.
பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் நிச்சயம் இருக்கும்.
காப்பி அடிக்கின்றேன் என்று ஈசியாக சொல்லிவிடுகிறார்கள்.
ஒரு படத்தை எடுக்கும் போது அதை இந்த ட்ரெண்டுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். அதற்கான கஷ்டம் எனக்குதான் தெரியும்.
நானும் ஒரு உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று கூறினார் அட்லி.