தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டெல்லியில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட மத கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ளதாக தகவல்கள் வந்தன.
இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது:
தன்னலமின்றி, உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி.
நமது உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.
கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் பரிசுத்தமான கோயில்.
இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல. அரசு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள்.
தனிமையில் சில நாட்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்தத் தொற்றைப் பரவி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.
புரளிகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல”
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness… pic.twitter.com/fjBOzKfqjy
— A.R.Rahman (@arrahman) April 1, 2020