தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
`நேரம்’, `பிரேமம்’ படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.
இது இசையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக அவரும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய படத்தில் சித்தார்த் மற்றும் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் நாயர்களாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தமிழ், மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாம்.
இது அல்போன்ஸ் புத்திரனின் வழக்கமான பார்முலா என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் என்பவர் இசையமைக்கிறார்.
தற்போது இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.